Rev. Subash Chandra Bose Subash Chandra Bose
-
- Religion & Spirituality
One of the most important things in our life is the control of our minds, our thoughts are powerful they can harm us or do us good.
Rev. Rev.Fr. Subash Chandra Bose
Cell: +91-9600881743
-
அழியாத கிரீடம் 👑
இந்த உலகத்தில் பெரக்கூடிய பரிசுகள், வெகுமதிகள் சில மணி நேரங்களில் மறைந்து போகும். ஆனால் தேவன் அளிக்கும் இந்த அழியாத கிரீடம் உதிர்ந்து போகாத, தேய்ந்து போகாத,முடிவில்லாத காலங்கள் புதிதாகவே இருக்கூடியது.இது தன்னைப்போல் உன்னையும் அழியாத வராக மாற்றிவிடும்.இத்தகய கிரீடத்தை பெருவதுதான் நமது வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும்.இச்சையடக்கம் என்ற சுபாவத்தை கைக்கொண்டு அழிவில்லாத கிரீடத்தைப் பெற்றிடுவோம்.
-
ஜீவ கிரீடம்
கிறிஸ்த்துவின் நிமித்தம் துன்பங்கள், சோதனைகள் போராட்டங்களை சகித்து கர்த்தருக்காக இப்பூமியில் வாழ்ந்து தேவனுடைய ராஜ்யம் சேறுகின்ற தேவ பிள்ளைகளுக்காக தேவன் அருளும் வெகுமதி தான் இந்த ஜீவ கிரீடம்.
-
நித்திய வாழ்வும் கிரீடங்களும்
நித்திய ஜீவன் என்பது ஆண்டவரை முடிவு பரியந்தமும் விசுவாசத்தோடு பின்பற்றுகிற அனைத்து தேவ பிள்ளைகளுக்கும் கிடைக்கக்கூடிய பரலோக வாழ்வு ஆகும்; பரலோக வாழ்வை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் வாழ்க்கையை மதிப்பீடு செய்து கர்த்தரால் கொடுக்கப்படும் வெகுமதிகள் தான் கிரீடங்கள் ஆகும்.
-
கர்த்தரே உன் இரட்சிப்பு
நாம் செய்யக்கூடிய சிறு சிறு நற்செயல்களை எண்ணி தன்னை ஒரு தியாகிப்போல நினைத்து பெருமை பாராட்டாமல், தேவனுடைய சமூகத்தில் தன்னை தாழ்த்தி தனது பெலவீனங்களை, குறைவுகளை உணர்ந்து தேவ கிருபையைத் தேடினால் அவர் உன்னை நீதிமானாக மாற்றி உன் துன்பத்திலிருந்தும் துயரத்தில் இருந்தும் உன்னை இரட்சிப்பார்.
-
நான் அவர்கள் தேவனாய் இருப்பேன்
நாம் தேவனைப் பார்த்து அவர் என் தேவன் நான் அவருடைய பிள்ளை என்று சொல்லுவதை பார்க்கிலும், அந்த தேவனே நம்மை பார்த்து நான் உன்னுடைய தேவன் நீ என்னுடைய பிள்ளை என்று சொல்லுவது எவ்வளவு பாக்கியமான விஷயம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடைய முடியாத, பெற முடியாத எந்த ஒரு விருப்பத்தையும், ஆஸ்தியவையும் உயரத்தையும் விட தேவனே பெரியவர், ஈடு இணை அற்றவர், மற்றும் நமக்குத் தேவையான அனைத்தும் அவரிடத்தில் உள்ளது என்பதை நீங்கள் உணர வேண்டும்
-
புது வருட வாக்குத்தத்த செய்தி. "என் நாமத்திற்கு பயந்து இருக்கிற உங்கள் மீது நீதியின் சூரியன்
கடந்த காலத்தில் நாம் எடுத்துக் கொண்ட தீர்மானங்கள் அர்ப்பணிப்புகள் பொருத்தனைகள் நிறைவேற்றப்படாமல் நிர்விசாரமாக விடப்பட்டிருந்தால்... இந்த புதிய வருடத்தில் மீண்டும் புதுப்பித்து அதை நிறைவேற்றுவோம் அதுதான் கர்த்தருக்கு பயப்படுதலின் அடையாளம் அப்படிப்பட்டவர்கள் மீது நீதியின் சூரியன் உதிக்கும்