Tamil Prince Podcast �� Tamil Prince
-
- TV & Film
Hi everyone,
Am from fictional character of book of mirdhath.
Books, cinema, Encyclopedia, Daily politics of world!
-
Chapter :1 தோழர் இரணியன் அவர்களின் கடைசி நாட்கள் - சுபாஷ் சந்திரபோஸ்!
கடந்த நூற்றாண்டில் தம் இன்னுயிரையும் மக்களுக்காக சமர்ப்பணம் செய்து தொடர்ச்சியாய் வாழ்வை அர்ப்பணித்த இடதுசாரிதோழர்களின் ஆகப்பெரும் முன்மாதிரி தோழர் இரணியன் அவர்களின் சரிதத்தின் கடைசி நாட்களின் காதையை அறிந்து கொள்வது நம்மவர்களின் கடமை!
-
பெண் பூசாரிகள் பற்றிய வரலாற்று தடங்கள் - தொ.பரமசிவன்
தமிழகத்தில் தற்போது நாம் காணக்கூடிய பெண் தெய்வ கோவில்களில் ஆண் பூசாரிகள் பூசிப்பது எவ்வளவு ஆகப்பெரிய முரண்! ஆண் தெய்வ கோவில்களிலும் பெண்கள் பூசாரிகளாக வழிபாடு செய்த வரலாற்று தகவல்களை பண்பாட்டின் வெளிப்பாட்டு மீதமான கல்வெட்டுக்களில் இருந்து எங்ஙனம் அறிவது. வாருங்கள் கேட்போம்!
-
தாய் - மக்சீம் கார்க்கி ! அத்தியாயம் -2
தோழர் மக்சீம் கார்க்கி எழுத்தோவியத்தில் படைக்கப்பட்ட ரஷ்ய நாவலின் தமிழ் வடிவத்தின் கீச்சொலி இது
-
புரட்சிகர மாற்றத்திற்க்காக ! - முனைவர் தொல் திருமா !
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தோழர் தொல்.திருமா அவர்கள் தனது நூலான அமைப்பாய் திரள்வோம் தொகுப்பிற்கு 2018 ஆம் ஆண்டு எழுதிய முன்னுரையின் கீச்சொலி வடிவம்!
-
தாய் நாவலின் முதல் அத்தியாயம் - மக்சீம் கார்க்கி!
உலக புகழ்பெற்ற எழுத்தாளர் தோழர் மக்சீம் கார்க்கியின் அழியா காவியபடைப்பான தாய் நாவலின் அறிமுக குறிப்புக்களும், தொடக்க அத்தியாயமும் இந்த பகுதியில் இடம் பெற்றிருக்கிறது! தாய் நாவல் 100 மொழிகளுக்கு மேலே உலகெங்கிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு பல நூறு பதிப்புக்களை பல தசாப்தங்களாக கண்டு வருகிறது. தமிழில் தாய் நாவலை முதன் முதலில் மொழிப்பெயர்த்தவர் தோழர் தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் . அவரது மொழிப்பெயர்ப்பும் மொழிநடையும் வார்த்தை தேர்வுகளும் சீரிய கருத்துக்களும் மூலத்தை சிதைக்காமல் கருத்தும் காட்சியும் மிக சிறப்பாய் அமைந்திருக்கிறது. தோழர் தொ.மு.சி அவர்களது நூல்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட்டு விட்டதால் மிகவும் மகிழ்வுடனே இந்நாவலை மக்களிடம் சேர்ப்பிக்க , ஆர்வமாக வாசிக்க துவங்கி இருக்கிறேன். ஆதரவு தாருங்கள்!
-
Black Moon - Tamil poet Vairamuthu!
1971 -72 ல் சென்னை பச்சையப்பா கல்லூரி ஆண்டு மலரில் இடம் பெற்று தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளான கவிதை இது. பேராசிரியர்கள் எதிர்த்தாலும் பெருவாரியான மாணவர்களிடையே வரவேற்பை பெற்ற கவிதை இது. கேட்டு பாருங்கள். கேட்டுவிட்டு கருத்தை பகிருங்கள்!