Maperum Sabaithanil - Hello Vikatan Hello Vikatan
-
- Geschiedenis
மாபெரும் சபைதனில்... புதிய நம்பிக்கையை, புதிய சிந்தனையை, புதிய வெளிச்சத்தை பாய்ச்சும் தொடர்! எழுத்து & குரல் - உதயச்சந்திரன் | Podcast channel manager- பிரபு வெங்கட்
-
'கலெக்டர்' என்ற மந்திரச் சொல் - சர் தாமஸ் மன்ரோ! | மாபெரும் சபைதனில்..! | பகுதி -1
19-வது வயதில், நீண்ட கடற்பயணம் மேற்கொண்டு மதராசப்பட்டினம் வந்து சேர்ந்தார் மன்ரோ. இங்கே அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
எழுத்து & குரல் - உதயச்சந்திரன்
Podcast channel manager- பிரபு வெங்கட் -
அது என்ன சிந்துவெளிப் புதிர்? | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 12
முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தது அந்தச் சம்பவம். ஒடிசாவின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் அந்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி. மதுரையில் பிறந்து முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்து, முதன்முதலில் தமிழிலேயே சிவில் சர்வீஸ் தேர்வெழுதி வெற்றிபெற்றவர். தமிழ்மேல் தீராக்காதல் கொண்டவரைக் காலம் கலிங்கத்தில் பணியமர்த்தியது. ஒடிசாவைப் புரிந்து கொள்வதற்காக அதன் உள்ளும் புறமும் சுற்றிக்கொண்டிருந்தவர் கண்ணில், கோராபுட் நகருக்கு அருகேயிருந்த ஒரு மைல் கல் புதிய தரிசனத்தைக் கொடுத்தது. ‘தமிளி’ என்று எழுதப்பட்டிருந்த அந்தக் கல் அவரது பயணத்தை மாற்றியது.
எழுத்து & குரல் - உதயச்சந்திரன் |
Podcast channel manager- பிரபு வெங்கட் -
இயற்கைப் பேரழிவுகள்..மீண்ட மக்கள்..வெளிவராத கதை | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 13
பதினைந்து ஆண்டு களுக்கு முன்னர் சென்னை மாநக ராட்சியின் துணை ஆணைய ராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டம். மிரட்சியுடனும் பிரமிப்பு டனும் சென்னையைப் பார்த்துப் பழகிய எனக்கு, ரிப்பன் மாளிகையின் வழியே சென்னை நகரின் நீள அகலத்தை நிர்வகிப்பது சுவாரஸ்யமான அனுபவ மாகத்தான் இருந்தது. காலை ஆறரை மணியிலிருந்து துப்புரவுப் பணி மேற்பார்வை. பின், நாள் முழுக்க அலுவலகம். நள்ளிரவு ஒரு மணியிலிருந்து அதிகாலை மூன்றரை மணி வரை போக்குவரத்துக்கு இடையூறின்றி நடக்கும் சாலைப்பணிகளை ஆய்வு செய்வது. மீண்டும் காலை ஆறரை மணி. ஞாயிற்றுக்கிழமை காலை மட்டும் சற்றுத் தாமதமாக அலுவலகம் செல்லலாம். பருவ மழைக்காலங்களில் ரிப்பன் மாளிகையின் எழுதப்படாத விதி இதுதான் அப்போது.பதினைந்து ஆண்டு களுக்கு முன்னர் சென்னை மாநக ராட்சியின் துணை ஆணைய ராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டம். மிரட்சியுடனும் பிரமிப்பு டனும் சென்னையைப் பார்த்துப் பழகிய எனக்கு, ரிப்பன் மாளிகையின் வழியே சென்னை நகரின் நீள அகலத்தை நிர்வகிப்பது சுவாரஸ்யமான அனுபவ மாகத்தான் இருந்தது. காலை ஆறரை மணியிலிருந்து துப்புரவுப் பணி மேற்பார்வை. பின், நாள் முழுக்க அலுவலகம். நள்ளிரவு ஒரு மணியிலிருந்து அதிகாலை மூன்றரை மணி வரை போக்குவரத்துக்கு இடையூறின்றி நடக்கும் சாலைப்பணிகளை ஆய்வு செய்வது. மீண்டும் காலை ஆறரை மணி. ஞாயிற்றுக்கிழமை காலை மட்டும் சற்றுத் தாமதமாக அலுவலகம் செல்லலாம். பருவ மழைக்காலங்களில் ரிப்பன் மாளிகையின் எழுதப்படாத விதி இதுதான் அப்போது.
எழுத்து & குரல் - உதயச்சந்திரன் |
Podcast channel manager- பிரபு வெங்கட் -
உலகமே வியந்த அந்த மாமன்னன் யார்? | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 2
ஷெர்லாக் ஹோம்ஸ் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தால் எப்படி இருக்கும்?
எழுத்து & குரல் - உதயச்சந்திரன் |
Podcast channel manager- பிரபு வெங்கட் -
கம்பீர நடை..90 வயது.. - சாம் மானெக் ஷா! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 10
அந்த மனிதரின் கம்பீர நடைப்பயிற்சியைக் காண குன்னூர் நகரமே காத்துக்கிடக்கும். செல்லப் பிராணிகள் அணிவகுக்க, தன் மனைவியின் கைகோத்து, நேர்கொண்ட பார்வையும் மிடுக்குமாக அவர் நடைபயிலும் அழகே அழகுதான். வழியெங்கும், வணங்குபவர்களின் வயதுக்கேற்ப ராணுவ ஒழுங்கோடு மேலெழும்பி அசைந்துதிரும்பும் அவர் கரங்கள். குழந்தைகளைப் பார்த்தால் மட்டும், சட்டென்று மென்முகம் தரித்து கன்னங்களை செல்லமாகத் தட்டி மலர்கள் பரிசளித்துச் செல்வதை வழக்கமாகவே வைத்திருந்தார். 90 வயதைத் தாண்டியும் அந்தமனிதரைப் பார்க்க நாடெங்கிலும் இருந்து பலர் வந்துகொண்டே இருந்தார்கள். முக்கிய தலைவர்கள் ராணுவ தளபதிகள், உயர் அதிகாரிகள், நிர்வாகிகள்... எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
-
காலண்டர் மூலம் நடந்த மாபெரும் மௌனப்புரட்சி! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 14
புத்தாண்டு பிறந்திருக்கிறது. கனவும் மறதியும்தான் நம் வாழ்க்கைப் பயணத்தைச் செதுக்குகின்றன. கடந்த காலத்தின் கசப்புகளை மறக்கவே மனம் என்றும் விழைகிறது.
எழுத்து & குரல் - உதயச்சந்திரன்|
Podcast channel manager- பிரபு வெங்கட்