E5: திருப்பாடல்கள் 5 | சங்கீதம் 5 | PSALMS 5 | திருவிவிலியம் | DAILY CATHOLIC BIBLE READING TAMIL | RC

Goal: We, Invest Parents Academy, want to inspire you daily morning with God's word, the Manna. So that you and we would walk in the way that JESUS CHRIST guided us.
We are happy and THANKS a lot for listening, If you like this podcast, REVIEW us here! please rate it 5 STARS on Apple Podcast! Have a Blessed Day Ahead!
If you know someone who could use this Podcast, SHARE this with them!
Want to keep in touch with us???
https://urlgeni.us/instagram/invest_parents ---> FOLLOW
https://urlgeni.us/instagram/angelinsahana ---> FOLLOW
https://urlgeni.us/youtube/channel/invest_parents ---> SUBSCRIBE
https://ip-10.creator-spring.com - BUY YOUR T-SHIRT HERE
திருப்பாடல்கள் 5: 1-12 (The Book of Psalms)
டகர் தலைவர்க்கு; குழல்களுடன்; தாவீதின் புகழ்ப்பா)
1 ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்;
என் பெருமூச்சைக் கவனித்தருளும்.
2 என் அரசரே, என் கடவுளே,
என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும்;
ஏனெனில், நான் உம்மை நோக்கியே மன்றாடுகின்றேன்.
3 ஆண்டவரே, விடியற்காலையில் என் குரலைக் கேட்டருளும்;
வைகறையில் உமக்காக வழிமேல் விழிவைத்து காத்திருப்பேன்.
4 ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை;
உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.
5 ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்க மாட்டார்;
தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர்.
6 பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்;
கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர்.
7 நானோ உம் பேரருளால் உமது இல்லம் சென்றிடுவேன்;
உம் திருத்தூயகத்தை நோக்கி
இறையச்சத்துடன் உம்மைப் பணிந்திடுவேன்;
8 ஆண்டவரே, எனக்குப் பகைவர் பலர் இருப்பதால்,
உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்;
உமது செம்மையான வழியை எனக்குக் காட்டியருளும்.
9 ஏனெனில், அவர்கள் வாயில் உண்மை இல்லை;
அவர்கள் உள்ளம் அழிவை உண்டாக்கும்;
அவர்கள் தொண்டை திறந்த பிணக்குழி;
அவர்கள் நா வஞ்சகம் பேசும். [*]
10 கடவுளே, அவர்களின் குற்றங்களுக்குரிய தண்டனையை
அவர்களுக்கு அளியும்;
அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளாலேயே வீழ்ச்சியுறட்டும்;
அவர்களுடைய ஏராளமான தீச்செயல்களை முன்னிட்டு,
அவர்களைப் புறம்பே தள்ளிவிடும்.
ஏனெனில், அவர்கள் உம்மை எதிர்த்துள்ளார்கள்.
11 ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்;
அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்;
நீர் அவர்களைப் பாதுகாப்பீர்;
உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர்.
12 ஏனெனில், ஆண்டவரே, நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்;
கருணை என்னும் கேடயத்தால் அவரை மறைத்துக் காப்பீர்.
குறிப்பு
[*] 5:9 = உரோ 3:13.
Disclaimer: Invest Parents Academy does not own the right to the script. All the audios shared are not depleting the quality of the Christianity or anybodyelse. The contents are used for educational purpose only. However, if you have any issues with this, please contact us by the email id investparents@gmail.com
SOURCE: திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 4
#tamilbiblereading #catholicbible #psalmstamil
資訊
- 節目
- 發佈時間2021年6月29日 下午2:27 [UTC]
- 長度4 分鐘
- 季數1
- 集數5
- 年齡分級兒少適宜