ஒல்லாந்தர் காலமும் கத்தோலிக்கத் தேவாலயங்களும் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்ப எழுநா
-
- Society & Culture
1619 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கேயர் ஆண்ட 39 ஆண்டுகாலம், முன்னர் வழக்கிலிருந்த பிற மதங்களை ஒடுக்கிக் கத்தோலிக்க மதத்துக்குத் தனியுரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் வசமானதும் இந்த நிலை முற்றாக மாறியது. கத்தோலிக்க மதம் தடைசெய்யப்பட்டது, கத்தோலிக்கக் குருமார்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இராச்சியத்திலிருந்த எல்லாக் கத்தோலிக்கத் தேவாலயங்களையும் தமதாக்கிய ஒல்லாந்தர் அவற்றைத் தமது சீர்திருத்தக் கிறித்தவ மதத் தேவாலயங்களாக மாற்றினர். 138 ஆண்டுகால ஒல்லாந்தர் ஆட்சியில் இறுதி இரண்டு பத்தாண்டுகளைத் தவிர எஞ்சிய காலப்பகுதி முழுவதும் கத்தோலிக்க மதத்தின் மீது கடுமையான ஒடுக்குமுறைகள் நிலவின. எனினும், கணிசமான அளவு கத்தோலிக்க மக்கள் பற்றுறுதியோடு தமது மதத்தைப் பின்பற்றிவந்தனர். அவர்கள் தனியார் வளவுகளிலும், வீடுகளிலும் கூடி மறைவாக வழிபாடுகளில் ஈடுபட்டுவந்துள்ளனர். அக்காலத்தில் கோவாவிலிருந்து வந்த கத்தோலிக்க மதகுருமார்களும் இரகசியமான முறையில் கத்தோலிக்க மக்களிடையே பணியாற்றியதற்கும் சான்றுகள் காணப்படுகின்றன.
1619 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கேயர் ஆண்ட 39 ஆண்டுகாலம், முன்னர் வழக்கிலிருந்த பிற மதங்களை ஒடுக்கிக் கத்தோலிக்க மதத்துக்குத் தனியுரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் வசமானதும் இந்த நிலை முற்றாக மாறியது. கத்தோலிக்க மதம் தடைசெய்யப்பட்டது, கத்தோலிக்கக் குருமார்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இராச்சியத்திலிருந்த எல்லாக் கத்தோலிக்கத் தேவாலயங்களையும் தமதாக்கிய ஒல்லாந்தர் அவற்றைத் தமது சீர்திருத்தக் கிறித்தவ மதத் தேவாலயங்களாக மாற்றினர். 138 ஆண்டுகால ஒல்லாந்தர் ஆட்சியில் இறுதி இரண்டு பத்தாண்டுகளைத் தவிர எஞ்சிய காலப்பகுதி முழுவதும் கத்தோலிக்க மதத்தின் மீது கடுமையான ஒடுக்குமுறைகள் நிலவின. எனினும், கணிசமான அளவு கத்தோலிக்க மக்கள் பற்றுறுதியோடு தமது மதத்தைப் பின்பற்றிவந்தனர். அவர்கள் தனியார் வளவுகளிலும், வீடுகளிலும் கூடி மறைவாக வழிபாடுகளில் ஈடுபட்டுவந்துள்ளனர். அக்காலத்தில் கோவாவிலிருந்து வந்த கத்தோலிக்க மதகுருமார்களும் இரகசியமான முறையில் கத்தோலிக்க மக்களிடையே பணியாற்றியதற்கும் சான்றுகள் காணப்படுகின்றன.
7 min