ஒல்லாந்தரின் யாழ்ப்பாண நகரம் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை எழுநா
-
- Society & Culture
ஒல்லாந்தர் யாழ்ப்பாண இராச்சியத்தைப் போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றிய பின்னர் தமது தலைமையிடத்தை யாழ்ப்பாண நகரத்திலிருந்து வேறிடத்துக்கு மாற்றுவது தொடர்பில் ஆலோசனைகள் இடம்பெற்றதாகத் தெரிகின்றது. இதனால் முதற் சில ஆண்டுகள் போர்த்துக்கேயருடைய கோட்டையையே ஒல்லாந்தர் பயன்படுத்திவந்தனர். மிக அவசரமான திருந்த வேலைகளையும், பாதுகாப்புக்கு அவசியமான குறைந்தளவு மேம்பாடுகளையுமே செய்யலாம் என்ற உத்தரவும் மேலிடத்தில் இருந்து வழங்கப்பட்டிருந்தது. இந்த அடிப்படையில் யாழ்ப்பாண நகரத்திலும், அரசாங்கத்தின் முன் முயற்சியோடு எந்த வேலைகளும் இடம்பெற்றிருக்காது என்று கருதலாம். குறிப்பாக நகருக்கான திட்டமிடலோ, அரசாங்கக் கட்டுமானங்களோ இடம்பெற்றிருக்க வாய்ப்புக்கள் இல்லை. தனியார் முயற்சிகளினால், போர்த்துக்கேயர் நகரத்தில் திருத்த வேலைகள் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், கோட்டைக்கு மிகவும் அண்மையில் இருந்த நகரத்தின் கட்டிடங்கள் சில இடிக்கப்பட்டது குறித்த தகவல்கள் உள்ளன.
ஒல்லாந்தர் யாழ்ப்பாண இராச்சியத்தைப் போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றிய பின்னர் தமது தலைமையிடத்தை யாழ்ப்பாண நகரத்திலிருந்து வேறிடத்துக்கு மாற்றுவது தொடர்பில் ஆலோசனைகள் இடம்பெற்றதாகத் தெரிகின்றது. இதனால் முதற் சில ஆண்டுகள் போர்த்துக்கேயருடைய கோட்டையையே ஒல்லாந்தர் பயன்படுத்திவந்தனர். மிக அவசரமான திருந்த வேலைகளையும், பாதுகாப்புக்கு அவசியமான குறைந்தளவு மேம்பாடுகளையுமே செய்யலாம் என்ற உத்தரவும் மேலிடத்தில் இருந்து வழங்கப்பட்டிருந்தது. இந்த அடிப்படையில் யாழ்ப்பாண நகரத்திலும், அரசாங்கத்தின் முன் முயற்சியோடு எந்த வேலைகளும் இடம்பெற்றிருக்காது என்று கருதலாம். குறிப்பாக நகருக்கான திட்டமிடலோ, அரசாங்கக் கட்டுமானங்களோ இடம்பெற்றிருக்க வாய்ப்புக்கள் இல்லை. தனியார் முயற்சிகளினால், போர்த்துக்கேயர் நகரத்தில் திருத்த வேலைகள் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், கோட்டைக்கு மிகவும் அண்மையில் இருந்த நகரத்தின் கட்டிடங்கள் சில இடிக்கப்பட்டது குறித்த தகவல்கள் உள்ளன.
6 min