கோல்புரூக் – கமரூன் அரசியல் சீர்திருத்தம் | இலங்கையின் இனவாத அரசியல்- ஒரு வரலாற்றுப் பார்வை | ப எழுநா
-
- Society & Culture
1830 களின் முற்பகுதியில், பிரித்தானியர்கள் இலங்கையில் தங்கள் நிலையை உறுதிப்படுத்துவதை கிட்டத்தட்ட பூர்த்திசெய்துவிட்டனர். ஐரோப்பாவிலும் உலக அரங்கிலும் அவர்களுக்கு பெரிய சவால்கள் இருக்கவில்லை. எனவே தீவின் அரசியல் ஸ்திரத்தன்மையிலும் பொருளாதார இலாபத்தைப் பாதுகாப்பதிலும் அவர்கள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினர். ஜெர்மி பெந்தம் (Jeremy Bentham) மற்றும் ஜேம்ஸ் மில் (James Mill) ஆகியோரால் அப்போது முன்வைக்கப்பட்ட சீர்திருத்தவாத அரசியல் சித்தாந்தத்தின் தாக்கத்தால் ஒரு புதிய சிந்தனை அலை உருவாகியிருந்தது. இது பயன்பாட்டுவாதம் (utilitarianism) என்று அறியப்பட்டது.
இலங்கைக்கு வந்த சேர் .வில்லியம் கோல்புரூக் மற்றும் சார்ல்ஸ் கமரூன் (Sir William Colebrooke and Charles Cameron) தலைமையிலான குழுவினர் தமது ஆய்வின் பின்னர் 1832இல் ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அது இலங்கைக் காலனியை ஆளுவதற்கு ஒரு புதிய வடிவத்தை உருவாக்கியது. கோல்புரூக் சீர்திருத்தம், கட்டாய உழைப்பு (இராஜகாரிய) மற்றும் அரசாங்க ஏகபோகங்களுக்கு முடிவுகட்ட வேண்டுமெனவும், சிவில் சேவையானது இனம் அல்லது சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் திறந்திருக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் கல்வி வழங்கப்படவேண்டும் எனவும், நீதித்துறை ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு சுதந்திரமாக இயங்க வேண்டும் என்றும், நீதிமன்றங்களில் சட்டம் ஐரோப்பியர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் சமனாக இருக்கவேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
இலங்கையில் ஆளுநர்கள் பொருளாதாரத் துறையிலும் பாதுகாப்புத் துறையிலும் பாதைகள் அமைப்பதிலும் அடைந்த வெற்றி குறித்து லண்டன் காலனியல் அலுவலகம் திருப்தி கண்ட போதிலும், ஆளுநர் நிர்வாகம் நடத்தும் விதம் குறித்து திருப்தி காணவில்லை. சட்டமன்றம் மற்றும் நிர்வா
1830 களின் முற்பகுதியில், பிரித்தானியர்கள் இலங்கையில் தங்கள் நிலையை உறுதிப்படுத்துவதை கிட்டத்தட்ட பூர்த்திசெய்துவிட்டனர். ஐரோப்பாவிலும் உலக அரங்கிலும் அவர்களுக்கு பெரிய சவால்கள் இருக்கவில்லை. எனவே தீவின் அரசியல் ஸ்திரத்தன்மையிலும் பொருளாதார இலாபத்தைப் பாதுகாப்பதிலும் அவர்கள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினர். ஜெர்மி பெந்தம் (Jeremy Bentham) மற்றும் ஜேம்ஸ் மில் (James Mill) ஆகியோரால் அப்போது முன்வைக்கப்பட்ட சீர்திருத்தவாத அரசியல் சித்தாந்தத்தின் தாக்கத்தால் ஒரு புதிய சிந்தனை அலை உருவாகியிருந்தது. இது பயன்பாட்டுவாதம் (utilitarianism) என்று அறியப்பட்டது.
இலங்கைக்கு வந்த சேர் .வில்லியம் கோல்புரூக் மற்றும் சார்ல்ஸ் கமரூன் (Sir William Colebrooke and Charles Cameron) தலைமையிலான குழுவினர் தமது ஆய்வின் பின்னர் 1832இல் ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அது இலங்கைக் காலனியை ஆளுவதற்கு ஒரு புதிய வடிவத்தை உருவாக்கியது. கோல்புரூக் சீர்திருத்தம், கட்டாய உழைப்பு (இராஜகாரிய) மற்றும் அரசாங்க ஏகபோகங்களுக்கு முடிவுகட்ட வேண்டுமெனவும், சிவில் சேவையானது இனம் அல்லது சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் திறந்திருக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் கல்வி வழங்கப்படவேண்டும் எனவும், நீதித்துறை ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு சுதந்திரமாக இயங்க வேண்டும் என்றும், நீதிமன்றங்களில் சட்டம் ஐரோப்பியர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் சமனாக இருக்கவேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
இலங்கையில் ஆளுநர்கள் பொருளாதாரத் துறையிலும் பாதுகாப்புத் துறையிலும் பாதைகள் அமைப்பதிலும் அடைந்த வெற்றி குறித்து லண்டன் காலனியல் அலுவலகம் திருப்தி கண்ட போதிலும், ஆளுநர் நிர்வாகம் நடத்தும் விதம் குறித்து திருப்தி காணவில்லை. சட்டமன்றம் மற்றும் நிர்வா
16 min