தமிழினப் படுகொலையின் 15 ஆவது ஆண்டில் இனப் படுகொலையின் அரசியல் | அருட்தந்தை. எழில் ராஜன் ராஜேந்த எழுநா
-
- Society & Culture
தமிழினப் படுகொலையின் 15 ஆவது ஆண்டில், நாங்கள் யாவரும் சாட்சிகளாய் பார்த்திருக்க பலஸ்தீனப் படுகொலை அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இஸ்ராயேல் – பலஸ்தீனப் போரை வெறும் இஸ்ராயேல் – பலஸ்தீனப் போராக மட்டுமே அவதானிக்க முடியாதென்பதை எல்லோருமே அறிந்திருக்கின்றோம். எனது ஆய்வு நோக்கம் கருதி இப் போரை, மத்திய கிழக்கில் பேரரசுக் கட்டமைப்புக்காக, புவிசார் அரசியல் தளத்தில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற பலப் பரீட்சைக்கான போராகவே நான் பார்க்க விரும்புகின்றேன். இந்தப் பலப் பரீட்சையில் ஏகாதிபத்திய வல்லதிகாரப் பலம் மத்திய கிழக்கில் நிலை நாட்டப்படும். ஏகாதிபத்தியப் பேரரசு வல்லாதிக்கப் போட்டியில், உப ஏகாதிபத்திய வல்லாதிக்கத்தை நிலைநாட்டுதல், தவிர்க்கப்பட முடியாததான அபத்தத்தைத் தோற்றுவிக்கின்றது. தமிழினப் படுகொலையும், தற்போது அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பலஸ்தீனப் படுகொலையும், மக்களின் உயிர்களை பலியெடுக்கும் ஏகாதிபத்தியப் பேரரசுக் கட்டமைப்புக்குத் தயாராகும் ஓர் அரசியல் – இராணுவக் கட்டமைப்பை அம்பலப்படுத்துவது மாத்திரம் அல்லாமல், இவ்வாறான பலப் பரீட்சையில் மக்களின் உயிர்கள் ஒரு பொருட்டே அல்ல என்பதோடு, புவிசார் அரசியல் நலன்களுக்காக வல்லாதிக்கப் பேரரசு எவ் உயரிய விலையையும் கொடுக்கத் தயாராய் இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.
தமிழினப் படுகொலையின் 15 ஆவது ஆண்டில், நாங்கள் யாவரும் சாட்சிகளாய் பார்த்திருக்க பலஸ்தீனப் படுகொலை அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இஸ்ராயேல் – பலஸ்தீனப் போரை வெறும் இஸ்ராயேல் – பலஸ்தீனப் போராக மட்டுமே அவதானிக்க முடியாதென்பதை எல்லோருமே அறிந்திருக்கின்றோம். எனது ஆய்வு நோக்கம் கருதி இப் போரை, மத்திய கிழக்கில் பேரரசுக் கட்டமைப்புக்காக, புவிசார் அரசியல் தளத்தில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற பலப் பரீட்சைக்கான போராகவே நான் பார்க்க விரும்புகின்றேன். இந்தப் பலப் பரீட்சையில் ஏகாதிபத்திய வல்லதிகாரப் பலம் மத்திய கிழக்கில் நிலை நாட்டப்படும். ஏகாதிபத்தியப் பேரரசு வல்லாதிக்கப் போட்டியில், உப ஏகாதிபத்திய வல்லாதிக்கத்தை நிலைநாட்டுதல், தவிர்க்கப்பட முடியாததான அபத்தத்தைத் தோற்றுவிக்கின்றது. தமிழினப் படுகொலையும், தற்போது அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பலஸ்தீனப் படுகொலையும், மக்களின் உயிர்களை பலியெடுக்கும் ஏகாதிபத்தியப் பேரரசுக் கட்டமைப்புக்குத் தயாராகும் ஓர் அரசியல் – இராணுவக் கட்டமைப்பை அம்பலப்படுத்துவது மாத்திரம் அல்லாமல், இவ்வாறான பலப் பரீட்சையில் மக்களின் உயிர்கள் ஒரு பொருட்டே அல்ல என்பதோடு, புவிசார் அரசியல் நலன்களுக்காக வல்லாதிக்கப் பேரரசு எவ் உயரிய விலையையும் கொடுக்கத் தயாராய் இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.
17 min