யாழ்ப்பாணத்து ஒல்லாந்தர் வீடுகள் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை எழுநா
-
- Society & Culture
1621 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன்றைய கோட்டைக்குக் கிழக்கே போர்த்துக்கேயர் உருவாக்கிய யாழ்ப்பாண நகரத்தை ஒல்லாந்தர் திருத்தி மேம்படுத்தினர். இந்த நகரம் பிரதான வீதி, சப்பல் வீதி, வங்கசாலை வீதி, ஒன்று தொடக்கம் நான்கு வரை எண்ணிடப்பட்ட குறுக்குத் தெருக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறிய நகரம் என்பதையும் இத்தொடரின் இன்னொரு கட்டுரையில் பார்த்தோம். பிரதான வீதியின் குறிப்பிட்ட சில பகுதிகள் தவிர்ந்த ஏனையவை குடியிருப்புப் பகுதிகளாகவே இருந்துள்ளன. தொடக்க காலத்தில் இது முற்று முழுதாக ஒல்லாந்தர் வாழும் பகுதியாகவே இருந்தது. உள்ளூர் மக்கள் இங்கே வாழ்வதற்கு அனுமதி இருக்கவில்லை. இதனால் ஒல்லாந்தக் குடியேறிகள் தங்களுக்கு ஏற்ற வகையில் அவர்களுடைய பாணிகளிலேயே அங்கே வீடுகளை அமைத்திருப்பர் என்பதில் ஐயமில்லை.
1621 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன்றைய கோட்டைக்குக் கிழக்கே போர்த்துக்கேயர் உருவாக்கிய யாழ்ப்பாண நகரத்தை ஒல்லாந்தர் திருத்தி மேம்படுத்தினர். இந்த நகரம் பிரதான வீதி, சப்பல் வீதி, வங்கசாலை வீதி, ஒன்று தொடக்கம் நான்கு வரை எண்ணிடப்பட்ட குறுக்குத் தெருக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறிய நகரம் என்பதையும் இத்தொடரின் இன்னொரு கட்டுரையில் பார்த்தோம். பிரதான வீதியின் குறிப்பிட்ட சில பகுதிகள் தவிர்ந்த ஏனையவை குடியிருப்புப் பகுதிகளாகவே இருந்துள்ளன. தொடக்க காலத்தில் இது முற்று முழுதாக ஒல்லாந்தர் வாழும் பகுதியாகவே இருந்தது. உள்ளூர் மக்கள் இங்கே வாழ்வதற்கு அனுமதி இருக்கவில்லை. இதனால் ஒல்லாந்தக் குடியேறிகள் தங்களுக்கு ஏற்ற வகையில் அவர்களுடைய பாணிகளிலேயே அங்கே வீடுகளை அமைத்திருப்பர் என்பதில் ஐயமில்லை.
6 min