பாடல்: சுப்பிரமணிய பாரதி இசை: தினா பாடியவர்: மாலதி கண்ணன் -- என் காதலன் காட்டிலே தேடுதல் பல்லவி திக்குத் தெரியாத காட்டில் -- உனைத் தேடித் தேடி இளைத்தேனே. சரணம் 1 மிக்க நலமுடைய மரங்கள் -- பல விந்தைச் சுவையுடைய கனிகள் -- எந்தப் பக்கத்தையும் மறைக்கும் வரைகள் -- அங்குப் பாடி நகர்ந்துவரு நதிகள் நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள் -- எங்கும் நீளக் கிடக்கு மலைக் கடல்கள் -- மதி வஞ்சித் திடுமகழிச் சுனைகள் -- முட்கள் மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள் -- ஒரு ... திக்குத் சரணம் 2 ஆசை பெறவிழிக்கும் மான்கள் -- உள்ளம் அஞ்சக் குரல்பழகும் புலிகள் -- நல்ல நேசக் கவிதைசொல்லும் பறவை -- அங்கு நீண்டே படுத்திருக்கும் பாம்பு தன்னிச்சை கொண்டலையும் சிங்கம் -- அதன் சத்தத்தினிற் கலங்கும் யானை -- அதன் முன்னின் றோடுமிள மான்கள் -- இவை முட்டா தயல்பதுங்குத் தவளை -- ஒரு ... திக்குத்
जानकारी
- कार्यक्रम
- प्रकाशित13 फ़रवरी 2017 को 12:00 am UTC बजे
- लंबाई4 मिनट
- रेटिंगश्लील