உங்களால் ஒரே நேரத்தில் உங்களைச் சுற்றி நிகழக்கூடிய பல்வேறு விஷயங்களைக் கவனத்தில் வைத்துக்கொள்ள முடியுமா?சாதராணமாகத் தன்னைச் சுற்றி நிகழும் பதினாறு விஷயங்களைக் கவனத்தில் வைத்திருக்க ஒரு கவனகரால் முடியும். இவ்வாறு செய்வது ஒரு கலை. நம் பண்டைய தமிழரிடம் இருந்த கலை. நினைவாற்றலின் உயர்ந்த வடிவமான இந்தக் கலைத்திறனை, இராம.கனக சுப்புரத்தினம் நன்கு அறிந்து வைத்திருக்கிறார். இது குறித்து மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறார்.இராம.கனக சுப்புரத்தினம் அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். 2019ஆம் ஆண்டு ஒலிபரப்பான நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.
정보
- 프로그램
- 채널
- 주기매일 업데이트
- 발행일2025년 7월 11일 오전 2:12 UTC
- 길이14분
- 등급전체 연령 사용가