SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

  1. 16 小時前

    மதுபானத்திற்கு விருது பெற்ற தமிழர் !!

    தேநீர் அருந்தியிருப்பீர்கள்.... வொட்கா எனும் மது பானத்தைக் கூட அருந்தியிருப்பீர்கள். ஆனால், இரண்டையும் கலந்து பருகியிருக்கிறீர்களா? அது சாத்தியமா என்று மற்றவர்கள் சிந்திக்க முதலே, ஆஸ்திரேலியாவின் முதல் தேநீர் கலந்த வொட்கா எனும் மதுபானத்தைத் தயாரித்து, அதற்காக விருதுகளும் பெற்று சாதனை புரிந்துள்ளார் இரமணன் கிருஷ்ணமூர்த்தி. இந்தப் பானத்தைத் தயாரிக்கும் கருத்துருவாக்கம் எங்கே ஏற்பட்டது. அதைத் தயாரிப்பதில் ஏதாவது சவால்களை எதிர்கொண்டாரா, இதற்கான ஆதரவு எப்படியிருக்கிறது போன்ற குலசேகரம் சஞ்சயனின் பல்வேறு கேள்விகளுக்கு இரமணன் 2016ஆம் ஆண்டில் பதில் தந்திருந்தார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.

    13 分鐘
  2. 1 天前

    செம்மணியில் மீண்டும் மனித புதை குழிகள்: நியாயம் கேட்கும் குரல்கள்

    வட இலங்கையின் அமைதியான கிராமமான செம்மணி, சமீபத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதை குழிகளால் மீண்டும் சர்வதேச ஊடகக் கவனத்தை ஈர்த்துள்ளது. 1990களின் இறுதியில் இவ்விடத்தில் முதல் முறையாக கிடைத்த புதை குழிகள், இலங்கையின் உள்நாட்டுப் போரின் அடக்கு முறைகளை உலகுக்கு வெளிச்சமிட்டிருந்தன – கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், வரலாற்றின் இருண்ட கட்டங்கள். முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், செம்மணி மீண்டும் கவனத்துக்கு வருகிறது. இம்முறை, எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களை பிப்ரவரி மாதம் நடந்த ஒரு கட்டுமானத் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர். நீதிமன்ற உத்தரவுகளின் பேரில் தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சி பணிகளில் இதுவரை 65ற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அதில் சில பச்சிளம் குழந்தைகளுக்குரியவை – பாடசாலைப் பைகள், பொம்மைகள் போன்ற தனிப்பட்ட பொருட்களும் அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சான்றுகள், பல வருடங்களாகப் பதில்கள் இல்லாமல் காத்திருக்கின்ற காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் தமிழ்ப் புலம்பெயர் சமூகங்கள், இந்த விவகாரம் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்துகின்றன. செம்மணி, தீராத காயங்களை நினைவூட்டும் இடமாகவும், வரலாற்று பொறுப்புக்கூறலைக் கோரும் சமூகத்தின் கூட்டு நினைவாகவும் நிற்கிறது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

    16 分鐘

評分與評論

4.1
(滿分 5 顆星)
7 則評分

簡介

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

「SBS Audio」的更多內容

你可能也會喜歡