E10: திருப்பாடல்கள் 10 | சங்கீதம் 10 | PSALMS 10 | திருவிவிலியம் | DAILY CATHOLIC BIBLE READING TAMIL | RC

Goal: We, Invest Parents Academy, want to inspire you daily morning with God's word, the Manna. So that you and we would walk in the way that JESUS CHRIST guided us.
We are happy and THANKS a lot for listening, If you like this podcast, REVIEW us here! please rate it 5 STARS on Apple Podcast! Have a Blessed Day Ahead!
If you know someone who could use this Podcast, SHARE this with them!
Want to keep in touch with us???
https://urlgeni.us/instagram/invest_parents ---> FOLLOW
https://urlgeni.us/instagram/angelinsahana ---> FOLLOW
https://urlgeni.us/youtube/channel/invest_parents ---> SUBSCRIBE
https://ip-10.creator-spring.com - BUY YOUR T-SHIRT HERE
திருப்பாடல்கள் - அதிகாரம் – 10: 1-18 – திருவிவிலியம் (The Book of Psalms)
நீதிக்காக வேண்டல்
1ஆண்டவரே, ஏன் தொலைவில்
நிற்கின்றீர்?
தொல்லைமிகு நேரங்களில்
ஏன் மறைந்துகொள்கின்றீர்?
2பொல்லார் தம் இறுமாப்பினால்
எளியோரைக் கொடுமைப்படுத்துகின்றனர்;
அவர்கள் வகுத்த சதித்திட்டங்களில்
அவர்களே அகப்பட்டுக் கொள்வார்களாக.
3பொல்லார் தம் தீய நாட்டங்களில்
தற்பெருமை கொள்கின்றனர்;
பேராசையுடையோர் ஆண்டவரைப்
பழித்துப் புறக்கணிக்கின்றனர்.
4பொல்லார் செருக்கு உள்ளவராதலால்
அவரைத் தேடார்;
அவர்கள் எண்ணமெல்லாம்
‛கடவுள் இல்லை!
5எம் வழிகள் என்றும் நிலைக்கும்’ என்பதே.
உம் தீர்ப்புகளோ மிக மேலானவை;
அவர்களின் அறிவுக்கு எட்டாதவை.
தம் பகைவர் அனைவரையும் பார்த்து
அவர்கள் நகைக்கின்றனர்.
6‛எவராலும் என்னை அசைக்க முடியாது;
எந்தத் தலைமுறையிலும்
எனக்குக் கேடு வராது’ என்று
அவர்கள் தமக்குள் சொல்லிக்கொள்வர்.
7அவர்களது வாய் சாபமும் கபடும்
கொடுமையும் நிறைந்தது;
அவர்களது நாவினடியில்
கேடும் தீங்கும் இருக்கின்றன.
8ஊர்களில் அவர்கள் ஒளிந்து
காத்திருக்கின்றனர்;
சூதறியாதவர்களை மறைவான இடங்களில்
கொலை செய்கின்றனர்;
திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே
அவர்கள் கண்ணாயிருக்கின்றனர்.
9குகையிலிருக்கும் சிங்கம்போல் அவர்கள்
மறைவில் பதுங்கியிருக்கின்றனர்;
எளியோரைப் பிடிப்பதற்காகவே
அவர்கள் பதுங்கியிருக்கின்றனர்;
தம் வலையில் சிக்கவைத்து
இழுத்துச் செல்கின்றனர்.
10அவர்கள் எளியோரை
நலிவுறச் செய்து நசுக்குகின்றனர்;
அவர்களது கொடிய வலிமையால்
ஏழைகள் வீழ்த்தப்படுகின்றனர்.
11‛இறைவன் மறந்துவிட்டார்;
தம் முகத்தை மூடிக்கொண்டார்;
என்றுமே எம்மைப் பார்க்க மாட்டார்’ என்று
பொல்லார் தமக்குள்
சொல்லிக் கொள்கின்றனர்.
(To be continued in Holy Bible)
Disclaimer: Invest Parents Academy does not own the right to the script. All the audios shared are not depleting the quality of the Christianity or anybodyelse. The contents are used for educational purpose only. However, if you have any issues with this, please contact us by the email id investparents@gmail.com
SOURCE: திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 3
#tamilbiblereading #catholicbible #psalmstamil
資訊
- 節目
- 發佈時間2021年7月20日 上午7:54 [UTC]
- 長度5 分鐘
- 季數1
- 集數10
- 年齡分級兒少適宜