Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam சொல்வனம்

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

  1. 6D AGO

    Solvanam Madhurabharathi Nerkanal by Saraswathi Thiagarajan

    Solvanam Madhurabharathi Nerkanal by Saraswathi Thiagarajanதிரு. மதுரபாரதி (சு. கணபதி) அவர்கள் தமிழ் இலக்கியத்திலும் பத்திரிகையியலும் இணைந்த ஒரு சிறந்த ஆளுமை. சிறுவயதிலேயே திருக்குறள் மற்றும் பாரதியார் கவிதைகள் ஊட்டிய வாசிப்பு பழக்கம், அவரை ஆழ்ந்த இலக்கியப் பயணத்திற்கு அழைத்துச் சென்றது. சிறுகதை, கவிதை, கட்டுரை, இசைப்பாடல், ஆங்கில–தமிழ் இருமொழி எழுத்து என பல வடிவங்களில் அவர் தொடர்ந்து எழுதிவந்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் படுகொலை பின்னணியில் எழுதிய ‘தீ’ என்ற சிறுகதை, இலக்கியச் சிந்தனையால் மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெற்றது. British Council மற்றும் The Poetry Society of India இணைந்து நடத்திய அனைத்துலகக் கவிதைப் போட்டியில் “The Making of a God” என்ற ஆங்கிலக் கவிதைக்கு இரண்டாம் பரிசு பெற்றது அவரது சர்வதேச இலக்கிய அங்கீகாரமாகும். The Hindustan Times நாளிதழில் வெளிவந்த நகைச்சுவைக் கட்டுரைகள், அவரது மொழி நயத்தையும் சமூகக் கூர்மையையும் வெளிப்படுத்துகின்றன. கல்கி மாத இதழின் இசைப்பாடல் போட்டியில் ‘இன்னும் உறங்காதே’ பாடல் முதல் பரிசு பெற்றது அவரது கலைவெளியின் மற்றொரு முக்கிய மைல்கல்லாகும். ‘மரத்தடி’, ‘அகத்தியர்’ போன்ற இணைய இலக்கிய மன்றங்களின் வழியாக உலகத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பரவலாக அறியப்பட்டவர். ‘ரமண சரிதம்’, ‘புத்தம் சரணம்’, ‘சீக்கிய மதம்’ போன்ற நூல்கள் தமிழில் மத–தத்துவ இலக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளன. இருபதாண்டுகளுக்கும் மேலாக ‘தென்றல்’ இதழின் ஆசிரியர் மற்றும் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றி, சமகாலத் தமிழ் இலக்கியத்திற்கு தொடர்ந்து வழிகாட்டி வருகிறார்தற்போது இவைகளில் தனது நேரத்தைத் தந்து வருகிறார். 1. Chief Editor, THENDRAL2. State Spiritual Coordinator, Sri Sathya Sai Seva Organizations (Tamil Nadu – South)3. Editor – Sanathana Sarathi (Tami)4. Trustee, Sri Sathya Sai Books and Publications, Tamil Nadu.

    1h 42m
  2. FEB 5

    சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- (Saju)சஜு- மரணப் புன்னகை - உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்

    சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- (Saju)சஜு- மரணப் புன்னகை - உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்ஸஜு கிராமியக் கலை, கவிதை, ஆய்வு ஆகிய மூன்றையும்இணைத்துப் பயணிக்கும் ஒருவர்.கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி ஊரைச் சேர்ந்தவர்.பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும்,சிறுவயதிலிருந்தே கிராமியக் கலை மீது கொண்ட ஆழ்ந்த ஆர்வம்அவரை செண்டை மேளக் கலையுடன் வாழச் செய்கிறது. கவிதை மீது கொண்ட ஈர்ப்பு,“துமிதங்”, “நீரருந்தும் நதி” போன்ற கவிதைத் தொகுப்புகளாகவாசகர்களை அடைந்தது.செண்டை மேளக் கலைவாழ்க்கையை“கொட்டடிக்காரன்” என்ற நூலாக ஆவணப்படுத்தி,ஒரு கலைஞனின் வாழ்வை இலக்கியமாக மாற்றியவர் இவர்.“ஆற்றுமாடன் தம்புரான்” என்றநாட்டாரியல் ஆய்வு நூல் தனித்த கவனத்தைப் பெற்றார். இவர், தெய்வக்கலை பற்றி எழுதிய ஆய்வு நூல் “தெய்யத்தின் முகங்கள்”விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருதைப் பெற்றுத் தந்துள்ளது. மனிதர்களின் புன்னகையையும், மரணத்தின் புன்னகையையும் ஒரே சமயத்தில் சுமக்கும் ஒரு நினைவுக் களஞ்சியம் இந்தக் கதைகதையை வாசிக்க:-https://solvanam.com/2025/12/14/மரணப்-புன்னகை/

    24 min
  3. FEB 5

    Solvanam- Thendral மதுரபாரதி Nerkanal by Saraswathi Thiagarajan

    திரு. மதுரபாரதி (சு. கணபதி) அவர்கள் தமிழ் இலக்கியத்திலும் பத்திரிகையியலும் இணைந்த ஒரு சிறந்த ஆளுமை. சிறுவயதிலேயே திருக்குறள் மற்றும் பாரதியார் கவிதைகள் ஊட்டிய வாசிப்பு பழக்கம், அவரை ஆழ்ந்த இலக்கியப் பயணத்திற்கு அழைத்துச் சென்றது. சிறுகதை, கவிதை, கட்டுரை, இசைப்பாடல், ஆங்கில–தமிழ் இருமொழி எழுத்து என பல வடிவங்களில் அவர் தொடர்ந்து எழுதிவந்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் படுகொலை பின்னணியில் எழுதிய ‘தீ’ என்ற சிறுகதை, இலக்கியச் சிந்தனையால் மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெற்றது. British Council மற்றும் The Poetry Society of India இணைந்து நடத்திய அனைத்துலகக் கவிதைப் போட்டியில் “The Making of a God” என்ற ஆங்கிலக் கவிதைக்கு இரண்டாம் பரிசு பெற்றது அவரது சர்வதேச இலக்கிய அங்கீகாரமாகும். The Hindustan Times நாளிதழில் வெளிவந்த நகைச்சுவைக் கட்டுரைகள், அவரது மொழி நயத்தையும் சமூகக் கூர்மையையும் வெளிப்படுத்துகின்றன. கல்கி மாத இதழின் இசைப்பாடல் போட்டியில் ‘இன்னும் உறங்காதே’ பாடல் முதல் பரிசு பெற்றது அவரது கலைவெளியின் மற்றொரு முக்கிய மைல்கல்லாகும். ‘மரத்தடி’, ‘அகத்தியர்’ போன்ற இணைய இலக்கிய மன்றங்களின் வழியாக உலகத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பரவலாக அறியப்பட்டவர். ‘ரமண சரிதம்’, ‘புத்தம் சரணம்’, ‘சீக்கிய மதம்’ போன்ற நூல்கள் தமிழில் மத–தத்துவ இலக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளன. இருபதாண்டுகளுக்கும் மேலாக ‘தென்றல்’ இதழின் ஆசிரியர் மற்றும் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றி, சமகாலத் தமிழ் இலக்கியத்திற்கு தொடர்ந்து வழிகாட்டி வருகிறார்தற்போது இவைகளில் தனது நேரத்தைத் தந்து வருகிறார். 1. Chief Editor, THENDRAL2. State Spiritual Coordinator, Sri Sathya Sai Seva Organizations (Tamil Nadu – South)3. Editor – Sanathana Sarathi (Tami)4. Trustee, Sri Sathya Sai Books and Publications, Tamil Nadu.

    24 min
  4. JAN 4

    சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- ஷைலஜா - மதியொன்றில்லை..- சரஸ்வதி தியாகராஜன்

    எழுத்தாளர் அமரர் ஏ. எஸ். ராகவனின் மகளான மைதிலி நாராயணனின் புனைபெயர் ஷைலஜா. இவர் 400 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 5 கட்டுரைகள் ,12 வானொலிநாடகங்கள், 3 தொலைக்காட்சி நாடகங்கள், கவிதைகள் என்று எழுதிவருவதுடன் கோலம், சமையல், பாட்டு, விளம்பரத்தில் குறும்படத்தில் பின்னணிக் குரல் கொடுப்பதுமாக மிளிர்கிறார். திருப்பாவை உபன்யாசம் செய்து வருகிறார். பாரதி விழாவின் போது நாடகத்தில் நடித்து பெங்களூரில் சிறந்த நடிகைக்கான விருது பெற்றவர். அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் இவர் எழுதிய 'திக்குத் தெரியாத காட்டில்' என்னும் நாவலுக்கு முதற் பரிசு கிடைத்துள்ளது. இவற்றிற்கு மேல் ஒரு கலகலப்பான இல்லத்தரசி மதியொன்றில்லை” என்ற இந்தக் கதை, வெறும் பக்திக் கதையோ, நகர–கிராம முரண்பாட்டுக் கதையோ அல்ல. இது ஒரு சொல்லின் பொறுப்பைப் பற்றிய கதை. ஒரு இளம் வயதில் சொன்ன ஒரு வாக்கியம், இன்னொருவரின் வாழ்வையே திசைமாற்றியிருக்கும் போது அந்த வாக்கியத்தைச் சொன்னவன் அதன் ஆழத்தை உணர்ந்த தருணமே இந்தக் கதை. கதையை வாசிக்க:-https://solvanam.com/2025/08/10/மதியொன்றில்லை/

    21 min
  5. 12/28/2025

    சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- எஸ்ஸார்சி - மனசுப் போல - சரஸ்வதி தியாகராஜன்

    சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- எஸ்ஸார்சி - மனசுப் போல - சரஸ்வதி தியாகராஜன் யூடியுப்: https://youtube.com/@thamils இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9os வடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம் காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன். எழுத்தாளர் எஸ்ஸார்சி என்கிற எஸ். ராமச்சந்திரன் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும் பெற்றிருக்கிறார். இவரது புதினம் ‘ கனவு மெய்ப்படும்’ திருப்பூர், எட்டயபுரம், மாநில வங்கி,, என் எல் சி நிறுவன விருது என நான்கு பரிசுகள் பெற்றது. ‘நெருப்புக்கு ஏது உறக்கம்.’ என்னும் புதினம் தமிழ அரசின் பரிசும் , சேலம் தாரையார் விருதும் பெற்றது. ஆங்கில இலக்கித்திலும் ஈடுபாடு உடைய இவர் ‘ரெயின் போ’ என்னும் கவிதை நூலையும், ‘பேகனும் திருவள்ளுவரும்’ ஒப்பீட்டு நூலையும் எழுதினார். ” மனசுப் போல” என்ற இவர் கதை ஒரு குடும்பப் பயணம், ** எதிர்பாராத விபத்து**, மற்றும் வீட்டுச் சாவி தொலைந்த பதற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒரு நடுத்தரக் குடும்பத்தின் யதார்த்தமான அனுபவங்களை நகைச்சுவை கலந்த நடையில் விவரிக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் எளிய ஆசைகளையும், மனிதத் திட்டமிடல்களுக்கு அப்பாற்பட்ட வாழ்வின் எதார்த்தத்தையும் அழகாகப் பிரதிபலிக்கிறது. பத்து ரூபாய்க்குப் பேரம் பேசுபவர்கள் நெருக்கடி நேரத்தில் தாராளம் காட்டுவது போன்ற மனித முரண்களையும், தொலைந்த சாவி மீண்டும் கிடைப்பது போன்ற விதியின் விளையாட்டையும்இக்கதை நுணுக்கமாகப் பேசுகிறது. வட்டார மணமும் கலகலப்பான நடையும் கொண்ட இப்படைப்பு, வாழ்வின் சோதனைகளுக்கு இடையில் 'அனைத்தும் நன்மையில் முடியும்' என்ற நம்பிக்கையை நமக்குத் தருகிறது

    1 min
  6. 12/18/2025

    எழுத்தாளர்- சார்பினோ டாலி - கிருஷ்ண லீலை- சரஸ்வதி தியாகராஜன் -சொல்வனம்- புனைவு வனம்

    சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சார்பினோ டாலி - கிருஷ்ண லீலை- சரஸ்வதி தியாகராஜன் யூடியுப்: https://youtube.com/@thamils இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9os வடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம் காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன். கிருஷ்ண லீலை’ — குடும்ப உறவுகள், தலைமுறை மோதல்கள், உள் விரிசல்கள், தனிமை, தன்னம்பிக்கை, மனச்சோர்வு, ஆண்மையின் அழுத்தம், சமூகப் பொறுப்புகள் போன்ற பல அடுக்குச் சிக்கல்களை அழகாக வெளிப்படுத்துகிறது. கதை முழுவதும் ஓர் தனிமனிதப் போராட்டத்தைச் சித்திரிக்கும் உளவியல் நதி போல ஓடுகிறது. கிருஷ்ணன் எனும் நண்பன் கொண்டு வரும் தத்துவ நுணுக்கங்கள் கதையின் ஓட்டத்துக்கு வித்தியாசமான ஒளியை அளிக்கின்றன. இந்த தத்துவ உரையாடல் இலக்கியத்தை மட்டுமல்ல, வாழ்வையே நம் முன் புதியப் பார்வையில் திறக்கும் என்று தோன்றுகிறது.

    28 min
  7. 12/17/2025

    சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பத்மகுமாரி - சிப்பிகளின் சிதறல்- சரஸ்வதி தியாகராஜன்

    சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பத்மகுமாரி - சிப்பிகளின் சிதறல்- சரஸ்வதி தியாகராஜன் யூடியுப்: https://youtube.com/@thamils இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9os வடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம் காணொளி: சரஸ்வதி தியாகராஜன். எழுத்தாளர் பத்மகுமாரி நாகர்கோயிலைச் சேர்ந்தவர். இவர் கணினித் துறையில் சென்னையில் பணி புரிகிறார். எழுதுவதில் மிகவும் ஆர்வம் உள்ளதால் தனக்குக் கிடைக்கும் நேரங்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். 2023 டிசம்பர் மாத இறுதியில் இவரது சிறுகதைத் தொகுப்பு புத்தகம் "நட்சத்திரம்" வெளியாகி உள்ளது. சிப்பிகளின் சிதறல்’ கதையில் சின்னவியல், மனித உளவியல், மற்றும் சமூக விமர்சனம் மிக அழகாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. சிப்பிகளின் சிதறல்’ ஒரு சாதாரண கதை அல்ல; அது மனித வலியின் மறைபடிமங்கள், உடைந்த மனத்தின் குரல்கள், மறைந்த நினைவுகளின் நிழல்கள், சமூகவியல் சாயல்கள் ஆகியவற்றை ஒன்றாகச் சுமந்து செல்லும் ஒரு உள் பயணம்.

    20 min
  8. 10/27/2025

    சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- தெரிசை சிவா - உயிர்மெய்- சரஸ்வதி தியாகராஜன்

    சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- தெரிசை சிவா - உயிர்மெய்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி: சரஸ்வதி தியாகராஜன். சிவா என்ற இயற்பெயர் கொண்ட தெரிசை சிவாவின் பிறந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனம்கோப்பு ஆகும். வேதியலில் முனைவர் பட்டம்  பெற்றவர்.  தற்போது துபாயில் எண்ணெய் நிறுவனத்தில்  பணி புரிகிறார்.  இவர் இதற்கு முன்பு குட்டிக்கோரா, திமில் என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இசை, சினிமா என சராசரி தேடுதல்களில் ஆரம்பித்து முகநூல் மற்றும் இலக்கிய வாசகர் வட்டங்களில் முனைப்புடன் இயங்கி வருகிறார். இவரது "சடலசாந்தி" சிறுகதை வாசகர்கள் மத்தியில் பரவலான கவன ஈர்ப்பைப் பெற்றது. அமானுஷ்யங்களையும் அறிவியலையும் அசாதாரண சம்பவங்களால் கோர்த்து எழுதியிருக்கும் "ருபினி" என்ற புதினம் இவரது முதல் புனைவு நாவலாகும். மேலும் வெளியாகி உள்ள இவரது புத்தகங்கள் தாச்சி, தகர் என்பன ஆகும். மண்சார்ந்த வட்டார வழக்கில் எழுதும் எழுத்தாளருக்குப் பரிசு கொடுக்கும் காலக்ஸி குழுமம் 2025 ஆம் ஆண்டுக்கான பாண்டியன் பொற்கிழி பரிசை தெரிசை சிவா அவர்களுக்கு அளித்துப் பெருமைப்படுத்தியது.

    33 min

About

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems