Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam சொல்வனம்

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

  1. 4d ago

    AbdulKareem ArunthuvidathaNool Solvanam SaraswathiThiagarajan-அப்துல் கரீம்-அறுந்துவிடாத நூல்

    AbdulKareem ArunthuvidathaNool Solvanam SaraswathiThiagarajan-அப்துல் கரீம்-அறுந்துவிடாத நூல் சு. அப்துல் கரீம் அவர்கள் முழுநேர எழுத்தாளர் அல்ல; மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றி வருகிறார். நண்பர்களுடன் தொடங்கிய இலக்கியப் பகிர்வு வாட்ஸ்அப் குழுவின் ஊக்கத்தால் மீண்டும் எழுதத் தொடங்கி, சிறுகதைகளைப் படைக்க ஆரம்பித்தார். அவரது கதைகள் இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களும் நிகழ்வுகளும் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பதிவு செய்து, பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாகவே அவர் சிறுகதைகளைப் பார்க்கிறார். சிறுகதைகள் எழுதும்போது கடைப்பிடிக்கவேண்டிய யுக்திகள் பற்றி சொல்வனம் மைத்ரேயன் அவர்கள் அளித்த கருத்துகளும் திருத்த ஆலோசனைகளும் தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன என்கிறார். வாருங்கள் அப்துல்கரீம். முன்னுரை உறவுகள் உருவாக பல ஆண்டுகள் தேவைப்படலாம்; ஆனால் அவற்றில் ஒரு விரிசல் தோன்ற சில நிமிடங்கள் போதும். அந்த விரிசலை மூடுவதற்கான வாய்ப்பை மனிதர்கள் தங்களின் அகங்காரம், பிடிவாதம், தவறான புரிதல்கள் ஆகியவற்றால் இழந்து விடுகிறார்கள். சு. அப்துல் கரீம் எழுதிய “அறுந்துவிடாத நூல்” சிறுகதை, முதுமை, நினைவுகள், குடும்ப உறவுகள், மன்னிப்பு, பேசப்படாத அன்பு ஆகியவற்றின் நுட்பமான உளவியல் சித்திரமாக அமைந்துள்ளது.

    27 min
  2. May 31

    Piranthanal Parisu-Ramarajan Manikavel- Solvanam--discussion SaraswathiThiagarajan பிறந்தநாள் பரிசு- ராமராஜன் மாணிக்கவேல்- சொல்வனம்-புனைவுவனம்- ச

    Piranthanal Parisu-Ramarajan Manikavel- Solvanam--discussion SaraswathiThiagarajanபிறந்தநாள் பரிசு- ராமராஜன் மாணிக்கவேல்- சொல்வனம்-புனைவுவனம்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வடிவமைப்பு:ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி: சரஸ்வதி தியாகராஜன்.பூவாயிக்குளத்தை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ராமராஜன் மாணிக்கவேல் தற்பொழுது சௌதி அரேபியாவில் வேலை பார்க்கிறார்.வாசிப்பை நேசிப்பவர். வாசிப்பு வழியாக கதைகள் எழுத முயற்சி செய்கிறார். இவரது கதைகள் சொல்வனம் மற்றும் சிறுகதைகள்.காம் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன.ஆன்மீக இலக்கியங்கள், ஆன்மிக சான்றோர்கள் வாழ்க்கை வரலாறுகளை விரும்பிப் படிப்பவர்.நிறைய சிறுகதைகளை சொல்வனத்தில் எழுதியுள்ளார். மீசை, சரணாகதி, கொடை, தொடுதிரை, ருருவின் பிரம்மத்வாரா, விசும்பின் துளி இந்தக் கதை வறுமைக்குள் வாழும் ஒரு குடும்பத்தின் அன்பு, சுயமரியாதை, தியாகம், நினைவுகள், தலைமுறை அனுபவங்கள், மற்றும் கல்வியின் அருமை ஆகியவற்றை நெஞ்சை நெகிழச் சொல்லும் ஒரு வாழ்க்கை ஆவணம்.கதையை வாசிக்க: https://solvanam.com/2026/03/22/பிறந்தநாள்-பரிசு/

    37 min
  3. May 14

    சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பிரதீப் பாரதி- சுழற் பிரயாணம்- சரஸ்வதி தியாகராஜன்

    சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பிரதீப் பாரதி- சுழற் பிரயாணம்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வடிவமைப்பு:ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி: சரஸ்வதி தியாகராஜன்.மருத்துவத் துறை சார்ந்த பிரதீப் பாரதி சிறந்த இலக்கிய வாசகர். . ஜெயமோகனை தன் ஆசிரியராக கருதுகிறார். டாலஸ் டெக்சாஸஸில் நண்பர்களுடன் இணைந்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நடக்கும் இலக்கிய கலந்துரையாடலை ஒருங்கிணைக்கிறார்.சொல்வனத்தில், மருத்துவத்தில் நிலைத்தவையும் , அழிந்தவையும் என்றதலைப்பில் வெவ்வேறு உலக நாகரீகங்களின் தொன்ம கதைகள், வரலாறு, இலக்கியம் மற்றும் தத்துவம் வழியே மருத்துவத்தின் வளர்ச்சி படிநிலைகள் பற்றி 13 கட்டுரைகள் கொண்ட அபுனைவு தொடர் எழுதி இருக்கிறார்..முதல் சிறுகதையான சுழற்பிரயாணம் இந்த ஆண்டு ஜனவரியில் சொல்வனத்தில் வெளியாகியது. “சுழற்பிரயாணம்” சிறுகதை, அதிகாரம், ஆன்மீகம், மனித மனதின் இருள் மற்றும் வாரிசுரிமைச் சுழற்சி ஆகியவற்றை மிக நுணுக்கமாகப் பேசுகிறது. ஒரு பிரமாண்டமான ஆசிரமத்தின் பின்னணியில், குரு-சீடர் உறவின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் வன்முறையையும் தந்திரத்தையும் இக்கதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.கதையை வாசிக்க: https://solvanam.com/2026/01/25/சுழற்பிரயாணம்/

    30 min
  4. May 14

    சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சுகவனேஸ்வரன் - எது தர்மம்?- சரஸ்வதி தியாகராஜன்

    சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சுகவனேஸ்வரன் - எது தர்மம்?- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வடிவமைப்பு:ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி: சரஸ்வதி தியாகராஜன்.கால்நடை மருத்துவர் சுகவனேஸ்வரனின் இயற்பெயர் கே. எஸ். ஸ்ரீராம்.சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் (Madras Veterinary College) முதுநிலைப் பட்டம் (M.V.Sc – கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறை ) பெற்று. தங்கப் பதக்கம் வாங்கி தமிழ்நாடு அரசு பணியில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார்  அமேஸானில் வெளிவந்துள்ள “நினைவணை உடைப்பு” என்ற தமிழ் கவிதைத் தொகுப்பின் சொந்தக்காரர். . விரைவில் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவர உள்ளது  “நான் சிவனாகிறேன்” என்ற இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பை ஒரு போட்டிக்கு சமர்ப்பித்துள்ளார்.  கதையை வாசிக்க: https://solvanam.com/2026/02/22/எது-தர்மம்/

    25 min
  5. Apr 28

    சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- கலைச்செல்வி - நேர்காணல் பகுதி2- காந்தி மீது எழுத்துலகப் பிரய

    சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- கலைச்செல்வி - நேர்காணல் பகுதி2- காந்தி மீது எழுத்துலகப் பிரயாணம் - சரஸ்வதி தியாகராஜன் யூடியுப்: https://youtube.com/@thamils இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம் காணொளி: சரஸ்வதி தியாகராஜன். எழுத்தாளர் கலைச்செல்வி அவர்கள் எழுத்துலகத்தின் மிகச்ச் சிறந்த படைப்பாளரில் ஒருவர். . இதுவரை வலி, இரவு, சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது, மாயநதி, கூடு , சமர்க்களம் என்கிற சிறுகதை நூல்களும், சக்கை, புனிதம், அற்றைத் திங்கள், ஆலகாலம், காந்தியைத் தவிர காந்தியை வேறு யாரால் கொல்ல முடியும்?, ஹரிலால் த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தேய்புரி பழங்கயிறு என்கிற நாவல்களும் வெளிவந்துள்ளன. இவர் பெற்றுள்ள விருதுகளும் ஏராளம். பொதுப்பணித் துறையில் பணி புரிபவர். இவர் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது , தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் வழங்கிய அழகியநாயகியம்மாள் விருது , திருப்பூர் அரிமா சங்கம் சக்தி விருது , புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சி விருது , இலக்கியச் சிந்தனை விருது , “தாழ்வாரம்“ சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான விருது, Sparrow விருது 2021 போன்ற தமிழின் குறிப்பிடத்தகுந்த விருதுகளைப் பெற்றுள்ளார் இவரது படைப்புகளான சக்கை நாவல் புத்தனாம்பட்டி நேரு மெமோரியல் கல்லுாரி, பி.ஏ. பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. கூடு சிறுகதை நூல் கோவை அரசுக் கலைக்கல்லுாரியில் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. காந்தி மீது ஈர்ப்பு எப்படி வந்து ஹரிலால் s/o மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற நாவலும் தேய்புரி பழங்கயிறு எழுதியது பற்றியும் கூறுகிறார். மேலும் அவர் கலந்து கொண்ட நியூ யார்க்கில் நடந்த Living Tamil LitFest நிகழ்ச்சியில் தன் அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

    18 min
  6. Apr 18

    சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சசி. -’பரகாயம்’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்

    சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சசி. -’பரகாயம்’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன் சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2026/01/25/பரகாயம்/ யூடியுப்: https://youtube.com/@thamils இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9os காணொளி- சரஸ்வதி தியாகராஜன். சசி என்ற புனைபெயர் கொண்ட சசிதரன் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆவர். இவர் சொல்வனம், ஆனந்த விகடன், வாசகசாலை மற்றும் இணைய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவர் வசிப்பது சென்னையில். சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2026/01/25/பரகாயம்/ சசி என்ற புனைபெயர் கொண்ட சசிதரன் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆவர். இவர் சொல்வனம், ஆனந்த விகடன், வாசகசாலை மற்றும் இணைய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவர் வசிப்பது சென்னையில். 'பரகாயம்'. இக்கதை மனிதனின் அக உணர்வுகளுக்கும், புற உலகின் எதார்த்தத்திற்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டை மிக நகைச்சுவையாகவும் அதே சமயம் ஆழமாகவும் பேசுகிறது. சற்குருநாதனின் அந்த அரை அடி அந்தர வெளி, ஒரு சாமானியனின் ஆன்மீக ஏக்கமா அல்லது மனப்பிரமையா என்று மனதில் தோன்றுகிறது. ஒரு மனிதன் தன் சாதாரண வாழ்விலிருந்து வெளியேறி வேறொரு நிலைக்குச் செல்லத் துடிக்கும் வேட்கையை நீங்கள் மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள். லௌகீக வாழ்வின் எலிப்பொறிகளுக்கு இடையில் ஆன்மீகச் சிறகுகளைத் தேடும் சற்குருநாதன்கள் நம்மிடையே உலவிக்கொண்டுதான் இருக்கிறார்கள் போலும்.

    34 min
  7. Apr 18

    சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- ஶ்ரீரஞ்சனி- மௌனத்தின் சுமை- சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்

    சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- ஶ்ரீரஞ்சனி- மௌனத்தின் சுமை- சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன் சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2026/01/25/மௌனத்தின்-சுமை/ யூடியுப்: https://youtube.com/@thamils இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9os காணொளி- சரஸ்வதி தியாகராஜன். மௌனத்தின் சுமை” கதை ஒரு குடும்ப இழப்பின் துயரத்தை மட்டும் சொல்லும் கதை அல்ல; பேசப்படாமல் மனத்தின் அடுக்குகளில் தேங்கிக் கொண்டிருக்கும் உணர்வுகள் எவ்வாறு ஒரு வாழ்வையே கனமாக மாற்றுகின்றன என்பதையும் மிகவும் அமைதியான ஆனால் ஆழமான முறையில் நமக்குள் வைக்கிறது. இந்தக் கதையில் ஒரு தாயின் உள்ளார்ந்த வேதனை, குற்றவுணர்வு, புரிந்து கொள்ள முடியாத ஒரு மௌனம், தலைமுறை இடைவெளி, புலம்பெயர் வாழ்க்கையின் உளவியல் அழுத்தம் — இவை அனைத்தும் மிக இயல்பாக பின்னப்பட்டுள்ளன. குறிப்பாக, பெரிய சம்பவங்களை விட அன்றாட வீட்டு தருணங்கள் வழியாகவே வலி நம்மை அடைகிறது என்பது இந்தக் கதையின் பெரிய பலம்

    31 min
  8. Mar 18

    பைசாசம்-சொல்வனம்- புனைவுவனம்- பிரம்ம ராக்ஷஸன் -உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்

    பைசாசம்-சொல்வனம்- புனைவுவனம்- பிரம்ம ராக்ஷஸன் -உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன்.எழுத்தாளர் பிரம்ம ராக்ஷஸன் இயற்பெயர் A G ஸ்ரீநிவாசன். M.Com, ACS (Inter) படித்து, சென்னையில் ஓர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். சிறுவயது முதலே நூல்கள் வாசிக்கும் பழக்கம் உடையவர். அவப்போது கட்டுரைகள் கதைகள் இணைய இதழ்களில் எழுதி வருகிறார். திருவாவடுதுறை ஆதீனத்தின் "சித்தாந்த ரத்தினம்" எனும் பட்டம் பெற்றுள்ளார். கதையை வாசிக்க:-https://solvanam.com/2025/08/24/பைசாசம்/

    24 min

About

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems