SBS Tamil - SBS தமிழ்

செய்தியின் பின்னணி: விக்டோரியா மாநிலத்தில் குற்றமிழைக்கும் சிறுவர்களுக்கு ஆயுள் தண்டனை?

“Adult Time for Violent Crime” எனப்படும் புதிய சட்டத்திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக விக்டோரிய மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த முன்மொழியப்பட்ட மாற்றங்களின் கீழ், 14 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் கடுமையான வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களை பெரியவர்களுக்கான நீதிமன்றத்தில் விசாரித்து, தேவையானால் ஆயுள்த்தண்டனை (life imprisonment) வரை வழங்கும் வாய்ப்பு ஏற்படும். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.