கடந்த செப்டம்பர் 10ம் திகதி உலக தற்கொலை தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கிலும் இதுகுறித்த விழிப்புணர்வையூட்டும் நோக்கிலும் ஆண்டுதோறும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்கொலை சம்பவங்கள் நமது சமூகத்தில் அதிகரித்திருப்பதற்கான காரணங்கள் தொடர்பிலும் இதற்கு எப்படி எங்கே உதவிபெறலாம் என்பது தொடர்பிலும் உளவியலாளரான கௌரிஹரன் தனபாலசிங்கம் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். மெல்பனில் வாழும் கௌரிஹரன் அவர்கள் 15 வருடங்களுக்கும் மேலாக உளவியலாளராக பணியற்றிவரும் அதேநேரம் பூர்வீக குடி பின்னணிகொண்டவர்கள் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
정보
- 프로그램
- 채널
- 주기매일 업데이트
- 발행일2025년 9월 18일 오전 2:59 UTC
- 길이16분
- 등급전체 연령 사용가