Hello From Hash🙂

Hashmithaa Sathish

A Podcast Channel which expresses sweet nothings, without any agenda with much of படித்ததில் பிடித்தது, நான் ரசித்தவை... கேட்டதில் ரசித்தது...

  1. 12/18/2024 · BONUS

    Thiruppavai - 4| Aazhi Mazhaikann| ஆழி மழைக்கண்ணா! |திருப்பாவை - 4 Hashmithaa Sathish | Full Series

    Thiruppavai - 4| Aazhi Mazhaikann| ஆழி மழைக்கண்ணா! |திருப்பாவை - 4 Hashmithaa Sathish | Full Series [18/12, 09:58] Hashmithaa Sathish: பாடல் 4) ஆழி மழைக்கண்ணா! ராகம்: வராளி ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் [18/12, 09:59] Hashmithaa Sathish: பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.

    4 min
  2. 12/18/2024

    Thiruppavai - 3| Ongi Ulagalandha| ஓங்கி உலகளந்த! |திருப்பாவை - 3 Hashmithaa Sathish | Full Series

    Thiruppavai - 3| Ongi Ulagalandha| ஓங்கி உலகளந்த! |திருப்பாவை - 3 Hashmithaa Sathish | Full Series #thiruppavai3 #ongiulagalandha #HashmithaaSathish Thiruppavai - 3| Ongi Ulagalandha| ஓங்கி உலகளந்த! |திருப்பாவை - 3 Hashmithaa Sathish | Full Series பாடல் 3) ஓங்கி உலகளந்த ராகம்: ஆரபி ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். பொருள்: தோழியரே! மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, வாமன அவதாரம் எடுத்த பரந்தாமன், இந்த பிரபஞ்சத்தையே அளந்து தன்னுடையதாக்கிக் கொண்டான். அவனது பெருமை குறித்து பாடவும், பாவைக்கு மலர் சாத்தி வழிபடவும் நீராடக் கிளம்புவோம். இந்த வழிபாட்டால் தேசமெங்கும், மாதம் மும்மாரி பெய்யும். வயல்களில் நெல் செழித்து வளரும். வயலுக்குள் மீன்கள் பாய்ந்தோடி மகிழும். குவளை பூக்களில் புள்ளி வண்டுகள் தேன் குடித்து மயங்கிக் கிடக்கும். பசுக்கள் வாரி வழங்கும் வள்ளலைப் போல, தாராளமாக பால் தரும். அள்ள அள்ளக் குறையாமல் செல்வம் பெருகும்

    3 min

About

A Podcast Channel which expresses sweet nothings, without any agenda with much of படித்ததில் பிடித்தது, நான் ரசித்தவை... கேட்டதில் ரசித்தது...