ஆசையில் ஓர் கடிதம்

Gnana Murugan

பைந்தமிழ் குட்டிஸ் இதழின் சார்பாக எங்களின் தலைமை ஆசிரியர் ஞான முருகன் அவர்களின் கடிதம் இங்கு குரல் வடிவமாக ஏற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இதில் குழந்தைகளுக்கான ஒரு நற்சிந்தனை விதைத்து எங்களின் இதழ் தொடங்கும்..

Episodes

  1. 09/16/2020

    ஆசையில் ஓர் கடிதம் - புரட்டாசி20: கணித்து செயல்படுவனுக்கு துன்பம் ஒன்றுமேயில்லை

    எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். அன்புத் தம்பியே, அழகுத் தங்கையே! குமரன் சொன்னது சரிதான். தனக்கு இன்னல் தரப்போகின்றவனின் மனநிலையை முன்னரே கணித்து செயல்படும் அறிவுடையவனுக்கு, அவன் அஞ்சி நடுங்கும்படியான துன்பம் என்று ஒன்றுமேயில்லை என்று அய்யன் வள்ளுவன் சொன்னதைத்தானே குமரன் கடைபிடித்தான். யாராவது உங்களுக்குத் தொல்லை தருவார்கள் என்று நீங்கள் எண்ணினால் முதலில் அவர்களின் மனநிலையைச் சற்று ஆய்வு செய்யுங்கள். தீய எண்ணம் கொண்டவன் மனநிலை சீராக இருக்காது. அதனை நீங்கள் புரிந்துகொண்டால் அவனால் வரும் இன்னலை உங்களால் தடுக்க இயலும்

    4 min
  2. 04/08/2020

    ஆசையில் ஓர் கடிதம் - சித்திரை 2020

    தஞ்சை பெரிய கோயிலை இராஜ ராஜா சோழன் என்ற மன்னர் கட்டினார் என்று நீங்கள் படித்திருப்பீர்கள். அவர் கோயிலை கட்டியபோது நடந்த ஒரு நிகழ்வை நான் இம்மடலில் எழுதப்போகிறேன்.. சிற்பியின் மனஉறுதியைக் கவனித்தீர்களா? தான் கற்றுக்கொண்ட சிற்பக் கலையை மனதார நேசிக்கிறார். அதில் சிறு தவறை மற்றவர்கள் கவனிக்கமாட்டார்கள் என்று அறிந்தாலும். தன் மன நிம்மதிக்காக அந்தத் தவறையும் திருத்திக்கொள்கிறார். நீங்களும் எதைச் செய்தாலும் மனவிருப்பதுடன் செய்யுங்கள். அதில் உங்களுக்கு மனதிருப்தி கிடைக்கும்வரை விடாதீர்கள். அப்படிச் செய்தால் மனமகிழ்வு நிறைந்த வாழ்வு உங்களுக்குக் கிடைக்கும், அதுவே சிறந்த அறமாகும். இதைத்தான் அய்யன் வள்ளுவர் சொல்கின்றார் “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற” இச்சித்திரையில் சீருடன் வாழுங்கள் வைகாசியில் மீண்டும் வலம் வருவோம்!

    4 min
  3. ஆசையில் ஓர் கடிதம் - பங்குனி 2020

    02/29/2020

    ஆசையில் ஓர் கடிதம் - பங்குனி 2020

    “அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” எதைக் கொண்டு வந்தால் என் அன்பு வெளிப்படும்? என்ற கேள்வியுடன் இம்மடலைத் தொடங்கினேன். நீங்கள் என்னிடம் அன்பைக் கொண்டு வந்தால் என் அன்பும் வெளிப்படும். இந்த உலகில் நம் கண் முன் காணும் ஒவ்வொரு உயிர்கள் மீதும் அன்பு காட்டவேண்டும்; இல்லையென்றால் கண்ணுக்குத் தெரியாத இறைவன் மீது எப்படி அன்பு காட்ட முடியும்? அன்புத் தம்பியே, அழகுத் தங்கையே! நீங்கள் இந்த உலகிற்கு எதையேனும் கொடுக்க வேண்டுமென நினைத்தால் அன்பைக் கொடுங்கள். இந்த உலகம் அதிகமாக ஏங்கிக் கிடப்பதும் அதே அன்புக்காகத்தான்...!  அனைவரிடமும் அன்புடன் பழகுவோம்...! அன்பினையே பகிர்வோம்!

    4 min

About

பைந்தமிழ் குட்டிஸ் இதழின் சார்பாக எங்களின் தலைமை ஆசிரியர் ஞான முருகன் அவர்களின் கடிதம் இங்கு குரல் வடிவமாக ஏற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இதில் குழந்தைகளுக்கான ஒரு நற்சிந்தனை விதைத்து எங்களின் இதழ் தொடங்கும்..