தமிழ் வளர்த்த தங்கங்கள்

Sangeetha Selvin

பைந்தமிழ் இதழின் இந்த பகுதியான "தமிழ் வளர்த்த தங்கங்கள்" பகுதியில் ஒவ்வொரு மாதமும் தமிழிற்காக உழைத்த தமிழ் சான்றோர்களை பற்றிய குறிப்புகளை பகிர்ந்து இன்றைய தலைவருக்கு எடுத்து சென்று பெருமை கொள்கிறோம்.

Episodes

  1. 09/16/2020

    தமிழ் வளர்த்த தங்கங்கள் 10- திரு.வி. கலியாணசுந்தரனார்

    திரு.வி.க. சென்னையை அடுத்த, போரூருக்கு அருகிலுள்ள துள்ளம் என்ற சிற்றூரில் 1883-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 26-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் விருத்தாசலம்; தாயார் பெயர் சின்னம்மாள். ஆரம்பக் கல்வியை தன் தந்தையிடமும், அதன்பின் கதிரைவேல் பிள்ளையிடமும் தமிழ் கற்ற திரு.வி.க., பின்பு சுவாமிநாத பண்டிதர், மயிலை மகாவித்துவான் தணிகாசலம், சிதம்பர முதலியார் போன்றோரிடம் திருமறைகள், நீதி நூல்கள், ஞான நூல்கள், இலக்கணம், இலக்கியங்கள் ஆகியவற்றைக் கசடறக் கற்றார். அயோத்தி தாசரிடமிருந்து பெளத்தக் கல்வியையும் கற்றார். எல்லா ஆசிரியர்களுமே அவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்த அறிவையும் திறமையையும் கண்டு வியந்தனர்; மதித்தனர்

  2. 08/13/2020

    தமிழ் வளர்த்த தங்கங்கள் 7 - ரா.பி.சேதுப்பிள்ளை

    திரு சேதுப்பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில்,  இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் இரண்டாம் நாள் பிறவிப்பெருமான்பிள்ளை - சொர்ணம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஆரம்பக்கல்வியை திண்ணைப் பள்ளியில் கற்ற சேது,  பின்னர் அருணாசல தேசிகரிடம் அடிப்படை இலக்கண, இலக்கியங்களைப் பயின்றார். பாளையங்கோட்டை தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியில் படித்தபின், இடைநிலைக் கல்வியை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை வகுப்பைச் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்றார். தமிழார்வமும் ஆராய்ச்சி வேகமும் கொண்டிருந்த சேதுப்பிள்ளைக்குப் பச்சையப்பன் கல்லூரிச் சூழல் ஆர்வத்தை அதிகரித்தது. படித்து முடிந்ததும் பச்சையப்பன் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணிபுரியத் துவங்கினார்.

  3. 07/14/2020

    தமிழ் வளர்த்த தங்கங்கள் 7 - மறைமலை அடிகள்

    நாகை மாவட்டத்தில் உள்ள காடம்பட்டியில், சொக்கநாதர், சின்னம்மை தம்பதியினருக்கு, 1876 ம் ஆண்டு, சூலைத் திங்கள்,15ம் நாள் பிறந்த அவரது இயற்பெயர் வேதாசலம். பள்ளிப் படிப்பைக் கூட முழுக்க முடியாதிருந்த குடும்ப சூழ்நிலையில் இருந்தாலும் தனக்கு தமிழின் மீதிருந்த ஆர்வத்தாலும், கடின உழைப்பாலும் சிறு வயதிலேயே பல தொல்தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். பல தமிழறிஞர்களுக்கு தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் பயின்று தேர்ச்சி பெற்ற திரு நாராயணசாமிப் பிள்ளை அவர்களிடம் தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்களையும், தருக்க நூல்களையும் முறையாகக் கற்றுச் சிறந்த அறிவு பெற்றார் மறைமலை அடிகளார்.

About

பைந்தமிழ் இதழின் இந்த பகுதியான "தமிழ் வளர்த்த தங்கங்கள்" பகுதியில் ஒவ்வொரு மாதமும் தமிழிற்காக உழைத்த தமிழ் சான்றோர்களை பற்றிய குறிப்புகளை பகிர்ந்து இன்றைய தலைவருக்கு எடுத்து சென்று பெருமை கொள்கிறோம்.