Ramana Maharshi Guidance (Tamil)

Vasundhara ~ வசுந்தரா

வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.

  1. ரமண மகரிஷி | உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்களது செயல்-விளைவு எல்லாம் பொறுப்பேற்று க

    Mar 15

    ரமண மகரிஷி | உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்களது செயல்-விளைவு எல்லாம் பொறுப்பேற்று க

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. சந்தோஷமான வாழ்க்கைக்கு இது ஒன்றே போதும். துன்பங்களை அகற்றி நிம்மதியாக வாழ,  மிகவும் எளிதானஉன்னதமான அறிவுரைகளை ரமண மகரிஷி அளிக்கிறார்.  நாம் செய்கிறோம் என்று நினைக்கும் வரை நமது செயல்களுக்கும் விளைவுகளுக்கும் நாமே பொறுப்பாகிறோம், அவ்வப்போது சிறிது இன்பத்தையும், பெரும்பாலாக துன்பத்தையும் அனுபவிக்கிறோம். ஆனால் உண்மை என்ன என்று ஆராய்ந்து யோசித்துப் பார்த்தால், ஏதோ ஒருஉயர்வான சக்தி தான் எல்லாவற்றையும் பரிபாலிக்கிறது, நடக்க வேண்டியது தானாக நடக்கும், என்பது தெரிய வரும். பின் அந்த சக்தியிடம் நம்மை ஒப்படைத்து விட்டால், துன்பத்தால் பாதிக்கப் பட மாட்டோம், நிலையான இன்பமும் சுகமும் கிடைக்கும். இதைத் தான் ரமண மகரிஷி தமது சொந்த அனுபவத்தால் நமக்குக் கற்பிக்கிறார். அதைநம்பி பயிற்சி செய்வது நம்மிடம் தான் இருக்கிறது. ~ வசுந்தரா.  Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    5 min

About

வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.