Seyalmantram

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள். It is all about Educational Trend in life time by focusing through this media.

  1. 6d ago

    #பாலக_வீதி_25_புனல்

    #பாலக_வீதி_25_புனல் பார்த்த லட்சியக் கருத்தில்வீற்றிருக்கும் திறவுகோல். பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார் வசையில் புகழ் வயங்கு வெண்மீன்திசை திரிந்து தெற்கு ஏகினும்தற் பாடிய தளி #உணவின்புள் தேம்பப் புயல் மாறி வான் பொய்ப்பினும் தான் பொய்யாமலைத் தலைய கடல் காவிரிபுனல் பரந்து பொன் கொழிக்கும்விளைவு அறா வியன் கழனி “உலகெங்கும் ஒரே மொழித் தடம் பேசும் ஆற்றல் ஆகும்.பயன்பாடுகளில் மட்டும் வேறுபடுகிறது”மொழி என்பது மனிதர்களைப் பிரிக்கும் கருவி அல்ல;அது நம் அனைவரையும் இணைக்கும் ஒரே ஆற்றலை அழகாக உணர்த்தும்.உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடலமைப்பையும், குரல் நாண்களையும் (Vocal cords) கொண்டிருப்பதால், நாம் எழுப்பும் அடிப்படை ஒலிகள் அனைத்தும் ஒவ்வொரு பொருளையும் ஒரே குரலோசையோடு குறிப்பிட்டுக் காட்டி பின்னர் அவரவர்க்கு தக்கவாறுஅந்தந்த மொழிகளில் மாற்றிக் கொண்டனர். உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடலமைப்பையும், குரல் நாண்களையும் (Vocal cords) கொண்டிருப்பதால், நாம் எழுப்பும் அடிப்படை ஒலிகள் அனைத்தும் ஒன்றே. மனித உடற்கூறியல் மற்றும் மொழியியல் மூலமாக மிகத் துல்லியமாக, அறிவியலின் படி, சொல்லவேண்டும் எனில் உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் குரல் நாண்கள் (Vocal cords), நாக்கு, பற்கள், உதடுகள் போன்ற ஒலிப்பு உறுப்புகள் (Vocal apparatus) ஒரே மாதிரியாகவே அமைந்துள்ளன. இதனால், மனித இனம் தோன்றி வாழத் தொடங்கிய காலத்தில் இருந்து, இயற்கையான சில அடிப்படை ஒலிகளையே(Basic sounds) நாம் அனைவரும் பயன்படுத்தி இருக்கிறோம். இதனை மொழியியல் மற்றும் மானுடவியல் பார்வையில் பின்வருமாறு விளக்கலாம்: இயற்கை ஒலிகள் (Onomatopoeia):தொடக்க காலத்தில் பறவைகள், விலங்குகள், நீர், காற்று போன்ற இயற்கையின் ஒலிகளை மனிதர்கள் அப்படியே நகலெடுத்து (Imitate) ஒலிக்கத் தொடங்கினர். அந்த அடிப்படை ஒலிகள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தன. அடிப்படை உணர்வு ஒலிகள் என்பது வலி, பயம், மகிழ்ச்சி, ஆச்சரியம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த மனிதர்கள் எழுப்பிய ஒலிகள் மா, ஆ, ஓ, ஐயோ போன்றவை ஆகும் . இக்குறியீடு, உலகெங்கும் உள்ள மனிதர்களுக்கு பெரும்பாலும் பொதுவானவையாக இருந்தன. மண்டல மாற்றங்கள் (Regional Variations) என்பது காலப்போக்கில் மனிதர்கள் வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து, வெவ்வேறு புவியியல் சூழல்களில் (Geographical locations) வாழத் தொடங்கியபோது, தங்களுக்குள் புதிய குறியீடுகளையும் சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர். அதுவே இன்று நாம் காணும் மொழிகளாக பல்வேறு ஆண்டுகளில் உருவெடுத்தன. சுருக்கமாகச் சொன்னால், “மூல ஒலி” ஒன்றுதான்; ஆனால் மனிதர்களின் இடப்பெயர்வு மற்றும் சமூகத் தேவைகளால் அதன் “வடிவங்கள்” மாறிவிட்டன.தமிழ் மொழியில் உள்ள “புனல்” என்ற சொல்லுக்கும், ஆங்கிலத்தில் உள்ள “Funnel” என்ற சொல்லுக்கும் இடையே ஒலியிலும் (Sound) பொருளவிலும் (Meaning) வியக்கத்தக்க வகையில் மிக நெருங்கிய ஒற்றுமை உள்ளது. இவற்றின் ஒற்றுமைகளை பின்வருமாறு காணலாம்:1. ஒலி ஒற்றுமை (Phonetic Similarity)தமிழில் புனல் (Pu-nal) என்று உச்சரிக்கிறோம்.ஆங்கிலத்தில் Funnel (Fun-nel) என்று உச்சரிக்கிறார்கள்.இரண்டு சொற்களின் தொடக்க மற்றும் இறுதி ஒலிகள் (P/F மற்றும் N-L) ஒரே மாதிரியான ஒலிப்புத் தன்மையைக் கொண்டுள்ளன. 2. பொருள் ஒற்றுமை (Semantic Connection)தமிழ் ‘புனல்’: இதன் நேரடிப் பொருள் “நீர்” அல்லது “பாய்ந்தோடும் நீர்” என்பதாகும்.ஆங்கில ‘Funnel’ என்பதன் பொருள் திரவ வடிவிலான நீர், எண்ணெய் போன்றவற்றை கொண்டவை ஆகும்.ஒரு குறுகிய பாத்திரத்திற்குள் பாய்ந்து செல்ல வைக்கும் ஒரு கருவி (நெனல் / புனல் வடிவக் கருவி) ஆகும்.இரண்டுமே “திரவத்தின் ஓட்டம்” (Flow of liquid) என்ற ஒரே அடிப்படையைக் குறிக்கின்றன. 3. மொழியியல் மற்றும் வரலாற்றுப் பார்வை (Linguistic Perspective)உலகில் உள்ள பல மொழிகளுக்கு இடையே இருக்கும் “ஒலி ஒப்புமை” (Phonetic Affinity) இதற்கு முக்கியக் காரணம்.ஆங்கிலச் சொல்லான ‘Funnel’ என்பது பழங்கால பிரெஞ்சு மற்றும் லத்தீன் மொழியின் fundere (இதன் பொருள்: ஊற்றுவது / To pour) என்ற சொல்லிலிருந்து உருவானது. தமிழ் மொழியில் ‘புனல்’ என்ற சொல் சங்க காலம் தொட்டே (எடுத்துக்காட்டாக: “புனல் வாதம்”, “புதுப்புனல்”) பாய்ந்து வரும் நீரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுருக்கமாக: நீரைக் குறிக்கும் தமிழ் வடிவமும் (புனல்), நீரை ஊற்றப் பயன்படும் ஆங்கிலக் கருவியும் (Funnel) ஒரே மாதிரியான ஒலியையும், திரவம் சார்ந்த பொருளையுமே கொண்டுள்ளன.இது உலக மொழிகளின் வேர்ச்சொல் ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

    8 min
  2. May 27

    48,200ஆண்டுகளுக்கு முன்பு- உறைபனியில் நிலைத்த தீநுண்மி காலம் எனலாம்.

    48,200ஆண்டுகளுக்கு முன்பு-உறைபனியில் நிலைத்த தீநுண்மி காலம் எனலாம்.48200 ஆண்டுகளுக்கு முன்பு #பருவநிலை மாற்றம் மற்றும் உறைபனி உருகுதல்.* காலநிலை மாறுதலினால் (Climate Change) ஆர்க்டிக் பகுதிகளில் வெப்பநிலை வேகமாக உயர்கிறது.* ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மூடப்பட்டிருந்த உயிரியல் பொருட்கள் வெளிப்படுகின்றன.* பழைய நுண்ணுயிரிகள், பூஞ்சைகள் மீண்டும் வெளிச்சத்துக்கு வருகின்றன8,500 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உறைபனி உருகும் நிலையில் → தொற்றுநோய் இடர் ஏற்பட்டது, என்கின்றனர்.சைபீரியாவின் நிரந்தர உறைபனியில் (Permafrost) சுமார் 16 மீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டது. தற்போதைய நிலையில், இந்த வைரஸ்கள் தற்போது மனிதர்களைத் தாக்காது; இவை அமீபாக்களை (Amoeba) மட்டுமே பாதிக்கின்றன.சுருக்கமாக, சொல்ல வேண்டுமெனில்,நிரந்தர உறைபனி என்பது வைரஸ்களுக்கு ஒரு "காலப் பெட்டகம்" (Time Capsule) போன்றது. போட்டியிட்டு வாழும் சுற்றுச்சூழல் காரணங்களால் அவர்கள் அழிந்து போன சூழலையும் அறிந்து கொள்ள முடியும். கல்லாவோ குகையில் கண்டெடுக்கப்பட்ட புதை படிவங்களின்படி, மனித இனம் லுசோனென்சிஸ் வாழிடம் இனம் குறைந்தது.  பெட்டக நிலையில் விரிவாகும் தீநுண்மி மட்டுப் படுத்தி திறனடைவோம்முகம் காட்டும் முகத்தின் அழகு      அகம் புறம் காதல் திருமணம் நகம் முடி வளர்ச்சி நிலை       மகத்தான வெற்றி தரும் தோல்வி.தோல்வி நாளும் தடை போடும்      பல்வேறு படிமலர்ச்சி காட்சி காண்க கல்வி உள்ளத்தில் ஒன்றிடும் பாங்கு      நல்ல முறையில் பின் பற்றுக. பற்றும் தொற்று நோய் பின்னர்        மாற்றம் இல்லாத நிலையில் அறிவு மாற்றும் திறன் இன்று மேலும்     கற்றுத் தடுக்கும் நோய் தடுப்பூசி.தடுப்பு முறை இலக்கு திறன்       எடுத்த எடுப்பில் மாறும் தன்மை உடுப்பு மாறி உறவு கொள்ளும்        கொடுப்பு முறை காலப் பெட்டகம். பெட்டக நிலையில் விரிவாகும் தீநுண்மி      ஒட்டி உறவாடி உறைபனியிலும் சிதையாதுகட்டி புரண்டிட உயிரற்றவையும் செயல்படும்     மட்டுப் படுத்த எதிர்ப்பு திறனடைவோம்.

    4 min
  3. May 21

    பாலக வீதி 24 #காவிரி

    பாலக வீதி 24 #காவிரி பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல். வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி #உணவின் புள் தேம்பப் புயல் மாறி வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி ., ---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் பட்டினப்பாலை தொடர் உருத்திரங்கண்ணனார் எடுப்பு : அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு: கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2 கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு: கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. - காவிரி நதிநீர் இணைப்புச் சோலை தாவித் தாண்டி நீராகட்டும். காலம் கடந்து செல்லும் உள்ளம் ஞாலம் விரிந்து காக்கும் நிலை நலமிகு பகுதி நீர் வளம் வலமிடம் விரியும் குருதி ஓட்டம். ஓட்டம் சீராய் ஊறும் அறிவு நாட்டம் மிகுந்து மகிழ்ச்சியில் ஏற்கும் வட்டமிட்டு நாளும் தாகம் தீர்க்க ஊட்டம் பெற்ற சுனை நீர்வழி‌. நீர்வழி பள்ளம் நோக்கி நிரவும் நீர் வாழ் உயிரினச் சேர்க்கை ஓர் ஊற்றுநீராய் மெல்லப் பெருகும் ஆர்வம் காட்டிய வயல்வெளி வாய்க்கால். வாய்க்கால் வரப்பு பரவிய நிலம் வாய்ப்பில் உள்ளூர் கண்ட காட்சி உய்ய உயர உயிர் வாழ்வினம் பாய்ந்து ஓடும் கால்வாயில் விரிந்திடும். விரியும் குருதி ஓட்டம் உடல் விரிந்த அளவில் தாயனை ஆறனை ஏரி குளம் நன்னீர் இணைப்பு வாரி வழங்குபவை காவிரி நதிநீர். காவிரி என்ற சொல் முதலில் வந்தது எப்போது? 'காவிரி' என்ற சொல் 'கா'ல்வாய் 'வி'ரிந்தது' எனும் கரந்துறை சொல்லாகும். 'க' என்ற சொல் நிறை கொண்ட நீண்ட நீர் வேறுபாட்டு நிலை, அடுக்கு நிலையாக குடகு மலையில் ஆண்டாண்டு காலம் விரிந்து சென்றதை பார்த்து அறிந்து கொண்டனர். உடலுக்கு தலை முதல் கால் வரை விரிந்து வளர்ந்து இருப்பது மெய்யியல் விரிவாக்கம் ஆகும். குடல் இயக்க குருதி போல், குடகு மலை நீர் அகண்ட நிலையை ஆண்டுதோறும் அறிந்தவற்றை கால்வாய் வழியாக விரிந்து செல்வதை 'காவிரி' எனும் கரந்துறை சொல் ஆகும். எனவே, #கால்வாய்_விரிந்து_சென்றதை_காவிரி_என_அழைக்கப்படுகிறது.

    9 min
  4. May 18

    தமிழ் கணக்கியல் வரலாறு - எணினியல் கணக்கு முறை

    தமிழ் கணக்கியல் வரலாறு - எணினியல் கணக்கு முறைவரலாற்று நிகழ்வுகளின் ஆய்வுக்கான கணக்கியல் அணுகுமுறைகள்Thangavelu ChinnasamyORCID ID: 0000-0003-0888-5440- thangavelu147@gmail.comபதிவர் செயல் மன்றம், தமிழ்நாடு இந்தியா Email: ctv1957@gmail.comதமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் கணக்கியல் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் இதனைக் காணலாம்.தமிழ் நாகரிகம் தொடர்பான தொல்பொருள், இலக்கியம் மற்றும் வரலாற்றில் கணக்கியல் ஆய்வுகள் மூலம் கருத வேண்டும் .தமிழக அரசின் தொல்லியல் துறையின் சமீபத்திய ஆய்வுகள் பண்டைய தமிழ் சமூகத்தில் கணக்கமுறைகள் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன. பண்டைய காலத்தில் சுமார் 2,300 ஆண்டில் இருந்து முதல் 1700 ஆண்டுக்குள் தமிழ் சமூகம் வணிகம், வரிவிதிப்பு மற்றும் நிர்வாகத்தின் மேம்பட்ட முறைகளை உருவாக்கியது.கணக்கு பதிவுகள் பனை ஓலைகளிலும் கல்வெட்டுகளிலும் எழுதப்பட்டன. அவற்றில் பல தடயங்கள் இன்றும் எடுத்துக் காட்டுகின்றன. தமிழ் வணிகர்கள் சரக்குகள், வரிகள், கொடுப்பனவுகள் மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகளில் பற்றிய விரிவான கணக்குகள் பராமரித்து வந்தது இந்தப் பதிவுகள் காட்டுகின்றன. 1 ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசு, வட கிழக்கு ஆப்பிரிக்கா, அரேபியா மற்றும் இந்தியா இடையே நீண்ட தூர வாணிபத்தை புரிந்து கொள்வதற்கான மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று எரித்ரேயன் கடலின் பெரிப்ளஸ் ஆகும்.தென்னிந்திய தமிழக மாநில ரோமன், கிரேக்கம், அரபு மற்றும் தென்கிழக்கு ஆசிய வணிக பெரும் மக்களுடன் இணைந்து வலுவான வணிகத் தொடர்புகள் வளர்த்துக் கொண்டன..குறிப்பாக, சோழர்களின் தலைமுறை காலத்தில் (c. 850-1279 CE). ஐந்நூற்றவர், அஞ்சுவண்ணம் மற்றும் நானா தேசி போன்ற வணிக நிறுவனங்கள் ஆசியா முழுவதும் விரிவாக பெருகி வணிக வலையமைப்புகளை மேற்கொண்டு வந்தனர். கிழக்கிந்தியக் கம்பெனியின் வருகைக்கு முன்னர், தமிழ் ஆட்சியாளர்கள் கணக்கியல், வரிவிதிப்பு, சரக்குக் கட்டுப்பாடு மற்றும் வணிக கட்டமைப்பு போன்ற ஒழுங்குமுறை அமைப்புகள் ஏற்கனவே நிறுவி இருந்தனர்.நானா தேசி - தென்னிந்தியாவில் இருந்து சுமத்ரா உட்பட தென்கிழக்கு ஆசியா வரை வர்த்தகப் பாதைகளை விரிவு படுத்திய வணிகக் குழுக்களில் ஒன்றாகும்.இந்த அமைப்புகள் தமிழ் சமூகத்தில் நிலவிய உயர்மட்ட பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் பதிவுகளை நிரூபித்துள்ளன.தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம்தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் இந்தியாவின் பழமையான நூலகங்களில் ஒன்றாகும்.மேலும் இது தமிழ் கலாச்சாரம், கணிதம், நிர்வாகம் மற்றும் கணக்கியல் தொடர்பான முக்கியமான கையெழுத்துப் பிரதிகளை பாதுகாத்து வருகிறது.தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பழங்கால இலக்கு வைத்த கணித அறிவின் தொகுப்பே கணக்கதிகாரம் ஆகும். இது பாதுகாக்கப்பட்ட ஒரு சிறப்பான முறையில் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து கணக்கீடு மற்றும் கணக்கியல் வரலாற்று முறைகளை இங்கு உள்ள பதிவுகளில் மேலும் விளக்குகிறது. இது இலக்கு இயல் தகவல்களை நினைவில் வைத்துக் கொண்டு பயன்படுத்தப்படும் நினைவாற்றல் மற்றும் கரந்துறை நுட்பங்களைப் பயன்படுத்தி வந்ததையும் குறித்து வைத்து உள்ளனர். தமிழ் மரபுகளில் கரந்துறை/ஆங்கிலத்தில் அக்ரோஸ்டிக் என்பது தமிழ் எழுத்துக்கள் மற்றும் சொற்களின் அடிப்படையில் கணக்கிடும் வரலாற்று முறையைக் குறிக்கிறது.இந்த அமைப்பு கணிதம், மொழி மற்றும் நினைவக நுட்பங்களை ஒருங்கிணைத்து கணக்கியல் நடைமுறைகளை எளிதாக்குகிறது.நாளும் செயல்படும் தொழில் முறை கணக்கீடுகளுக்கு விரல்களை இலக்காக வைத்து பொதுவாக பயன்படுத்தப்பட்டது.இந்த முறைகள் தமிழ் சமூகம் புத்தக பராமரிப்பு மற்றும் எணினியல் அமைப்பு ஆகியவற்றில் தனித்துவமான அணுகுமுறைகளை உருவாக்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது. நூல்கள் பல காவேரிப்பட்டினம் என்றும் அழைக்கப்படும் பண்டைய துறைமுக நகரமான பூம்புகார் பற்றி விவரிக்கிறது, இது பின்னர் நீரில் மூழ்கியது.நவீன தொல்பொருள் ஆய்வுகள், நீருக்கடியில் ஆய்வுகள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் குளியல் அளவீட்டு பகுப்பாய்வு ஆகியவை இந்த இலக்கியக் கணக்குகளை ஆதரிக்கின்றன. ரோமானிய மட்பாண்டங்கள்மற்றும் இப்பகுதியில் காணப்படும் பிற கலைப்பொருட்கள் தென்னிந்தியாவிற்கும் ரோமிற்கும் இடையிலான ஆரம்ப கால வர்த்தக தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன.அரிக்கமேடு, கொற்கை, கொடுமணல், பட்டணம் மற்றும் பழங்கால கடல் வணிகப் பாதைகள் இருந்ததற்கான முக்கிய ஆதாரங்களை பின்வரும் தளங்களில் அகழ்வாராய்ச்சி

    14 min
  5. May 10

    பாலக வீதி 23 கடல்

    பாலக வீதி 23கடல்ஆம், அறிவியல் பூர்வமாக உயிரினங்கள் முதன் முதலில் கடலில் தான் தோன்றின என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை ஆகும்.மெய்யறிவே இயற்கை தரும் கொடை.இயற்கையோடு இணைந்து வாழும் போது தான் மனிதன் உண்மையான அறிவையும், அமைதியையும் பெறுகிறான்.#கடல்  பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன்      திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி உணவின்       புள் தேம்பப் புயல் மாறி        வான் பொய்ப்பினும் தான் பொய்யா        மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும்      விளைவு அறா வியன் கழனி ---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார் எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு:        கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு:       கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. கடலைக் குறிக்கும் பிற சொற்கள் :தமிழில் கடலானது அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலநிதி, சலராசி, சலதி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை என பல சொற்களால் தமிழில் கடல் குறிப்பிடப்படுகிறது.---கடல் சூழ் நிலை பனிப்பொழிவு       உடல் தந்த உயிரணு தாயனை குடல் இயக்க குருதி ஓட்டம்       மடல் முறை மாறி மின்னலை. மின் அலை மின் துகள்கள்      மின் சுமை தாங்கும் திறன் மின் ஊட்டம் தரும் பாங்கு       மின்னியல் இணைய தரவு அருகலை. அருகலை இணங்கிய மின்கம்பி இணக்கம்      அருகருகே உள்ள தொழில் தொடர்பு தருவது இணைப்பு இல்லாத இயக்கம்       இருக்கின்ற கதிரவ மின்னோட்ட மின்சாரம். மின்னஞ்சல் மூலப் பரிமாண அளவு      தன் உள்ளே பெற்று எங்கும் பன்மடங்கு தூரம் பயணம் செய்யும்      தொன்னீர், பரப்பு பெருநீர் (கடல்) என்பர்.தொன்மையான நீர் -தொன்னீர் பரப்பு, கடற்பரப்பு என அறியப்படும். பெருநீர் என 71 விழுக்காடு கொண்ட புவியில், பெருநீர் கொண்டவை 97 விழுக்காடு உள்ளது.

    11 min

About

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள். It is all about Educational Trend in life time by focusing through this media.